சனி, 18 அக்டோபர், 2014

ஜெயலலிதா இன்று சிறையில் இருந்து விடுதலையாகிறார் !

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.


http://epaper.dailythanthi.com/

ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா எழுந்ததாகவும், சிறிது நேரம் நடைபயிற்சி செய்து விட்டு, பின்னர் சிறையில் உள்ள துளசி செடியை வணங்கியதோடு மைசூர் சாமூண்டீஸ்வரி, மூகாம்பிகை அம்மனை வழிப்பட்டதாகவும், செய்திதாள்களை படித்ததாகவும், ஜாமீன் மனு பற்றி சில வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில், மதியம் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்பான செய்தியை சிறையில் உள்ள தொலைகாட்சியில் ஜெயலலிதா பார்த்ததாகவும், ஜாமீன் கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மற்ற பெண் கைதிகளுக்கு இனிப்பு வழங்கியதாகவும் சிறையில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன. அதன்பிறகு, மதிய உணவாக ஜெயலலிதா தயிர்சாதம் சாப்பிட்டதாகவும், பழரசம் குடித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.மேலும் ஜாமீன் பெற வசதி இல்லாத 3 ஏழை பெண் கைதிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக அவர் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

பெங்களூர்: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர உள்ள ஜெயலலிதா இன்று மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். பெங்களூர் மத்திய சிறையில் இன்று காலை 6.30 மணிக்குதான் ஜெயலலிதா வழக்கமாக 5.30 மணிக்கெல்லாம் எழுந்துகொள்ளும் ஜெயலலிதா நிம்மதியாக தூங்கியதாலோ என்னவோ, இன்று ஒரு மணி நேரம் காலதாமதமாக எழுந்துள்ளார்.

சிறிது வாக்கிங் சென்ற பிறகு தமிழ், ஆங்கில பத்திரிகைகளை வாசித்துள்ளார் ஜெயலலிதா. ஒரு பக்கம் விடாமல் அனைத்து பத்திரிகைகளையும் கவனமாக படித்துள்ளார். இதன்பிறகு குளித்துவிட்டு, சிறை வளாகத்திலுள்ள துளசி மாடத்திற்கு பூஜைகள் நடத்தியுள்ளார். பூஜைக்கு பிறகு, இட்லி, பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு மேற்கொண்டு பழச்சாறு பருகியுள்ளார்.
இவற்றை ராஜ்யசபா அதிமுக எம்.பி செல்வகுமார் வாங்கி கொடுத்துள்ளார். மொத்தத்தில், வழக்கத்தைவிட இன்று ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பின் நகல் நேற்று மாலை வரை பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு கிடைக்காததால், அவரால் நேற்று சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

பணி முடிந்து வழக்கமாக மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்கா 5.30 மணி வரை கோர்ட்டு அறையில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உத்தரவாத பத்திரம் வழங்குபவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை. இதனால் 5.30 மணிக்கு நீதிபதி மைக்கேல் டி.குன்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

எனவே, ஜாமீன் நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று (சனிக்கிழமை) ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று 22 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி அங்கிருந்து சென்னை திரும்புகிறார். அதற்கான துரித பணிகளி அவரது வக்கீல் குழு ஈடுபட்டு உள்ளது.

வெள்ளி, 17 அக்டோபர், 2014

Maalaimalar ePaper 17-OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  17-OCT-2014



  

 

 

 

 

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 21 நாட்கள் சிறை வாசம் இன்றுடன் முடிந்தது

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த மாதம் 27–ந் தேதி பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் எப்போது ஜாமீனில் விடுதலை ஆவார் என்ற எதிர்பார்ப்பு நாடெங்கும் ஏற்பட்டது.


இதனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கியதால் அவர் பெங்களூர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்.

இதன் மூலம் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் 21 நாட்கள் சிறை வாசம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

அதிமுகவினரின் 6 நாள் தீபாவளிக் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது!

சென்னை: அடேங்கப்பா.. தாயைப் பிரிந்து தவித்த குட்டிக் குழந்தை, மீண்டும் தன் தாயைக் கண்டபோது எப்படித் துடித்து துவளுமோ, அதுபோல துள்ளிக் குதிக்கிறார்களே அதிமுகவினர்.. அந்த அளவுக்கு அவர்களின் கொண்டாட்டத்தில் துள்ளல் தெரிகிறது. தீபாவளியை இன்றே அவர்கள் ஆரம்பித்து விட்டனர். கொட்டும் மழையிலும் குத்தாட்டத்துடனும், ஆரவார கூச்சலுடனும் அதிமுகவினர் தங்களது 6 நாள் தீபாவளியை இன்றே ஆரம்பித்து வி்ட்டனர். 
 
 
 21 நாட்களாக நட்டாற்றில் விடப்பட்டவர்கள் போன்ற நிலைக்கு ஆளாகியிருந்தார்கள் அதிமுகவினர். ஆட்சி கையில், அதிகாரம் கையில்.. ஆனாலும் என்ன செய்வது என்று தெரியாமல், அத்தனை பேரின் இளக்காரம், கிண்டல், கேலி, விமர்சனங்கள் என்று பெரும் துயரத்தில் மூழ்கிப் போயிருந்தனர் அதிமுகவினர். ஆனால் அத்தனை வருத்தத்தையும் உச்சநீதிமன்ற உத்தரவு இன்று துடைத்து விட்டது.
 
 அதிமுகவினரின் 6 நாள் தீபாவளிக் கொண்டாட்டம் இனிதே தொடங்கியது! 
 
 ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது என்ற தகவல் பரவியதும் சென்னையில் மழையையும் பொருட்படுத்தாமல் அதிமுகவினர் வீதிகளில் உற்சாகக் கொண்டாட்டங்களில் குதித்து விட்டனர். 
 
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். எங்கு பார்த்தாலும் அதிமுகவினர் கொண்டாட்டமாக உள்ளது. தீபாவளியை வருத்தத்துடன் கொண்டாட வேண்டி வருமோ என்ற பெரும் கவலையிலும், அதிமுக தொடங்கப்பட்ட 43 ஆண்டு விழாவை கொண்டாட முடியாமல் போய் விட்டதே என்ற வருத்தத்திலும் மூழ்கிக் கிடந்த அதிமுகவினருக்கு இன்று இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்து விட்டது உச்சநீதிமன்ற உத்தரவு. 
 
இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை கொண்டாட்டத்தையும் மொத்தமாக சேர்த்து வட்டியும் முதலுமாக கொண்டாடி வருகின்றனர் அதிமுகவினர். எல்லோருக்கும் தீபாவளி 22ம் தேதிதான். ஆனால் அதிமுகவினருக்கோ அது ஆறு நாள் தீபாவளியாக மாறியுள்ளது. ஆம். இன்றே அவர்கள் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-cadres-begin-their-diwali-today-itself-213144.html

ஜெயலலிதாவுக்கு இடைக்கால பிணை

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்து வரும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஜாமின் வழங்கியிருக்கிறது.


இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், அதுவரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் வழங்கக் கோரியும் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து மற்றும் நீதிபதிகள் மதன் பி லோக்கூர், ஏ.கே. சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்த போது அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மேல் முறையீடு தொடர்பிலான அனைத்து நகல்களும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வயது மற்றும் உடல்நலம் ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் ஆதிமுக அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் ஆதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுlithaபட்டு வருகின்றனர்.