புதன், 27 நவம்பர், 2013

ஈழம் : உரிமை காக்க உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி ! Heroes Day 2013

உதயன் Epaper 27Nov2013

பிரபாவின் பெயரால் நேற்று நாடாளுமன்று கொந்தளிப்பு; கூட்டமைப்பு எம்.பியின் உரையால் அரச தரப்பினர் சீற்றம்



http://euthayan.com/indexresult.php?id=24391&thrus=0




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர்  வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும் உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள் இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார்.

இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக் கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார்.

இவர்கள் இப்படியான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத் தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.

இதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன் எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பிறந்ததினமான நேற்று அவரின் பெயர் மற்றும் மாவீரர் நாள் தொடர்பில் நாடாளுமன்றில் அரச தரப்பு சீற்றமடைந்தது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சபையில் நேற்று பிரபாகரன் குறித்தும் இன்று அனுஷ்டிக்கப்படும் மாவீரர்நாள் தொடர்பிலும் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
 
நாடாளுமன்றில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர்  வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமானது. 
 
இதில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் தொடர்பிலும் மாவீரர்நாள் சம்பந்தமாகவும் உணர்வுபூர்வமான கருத்துகளை வெளியிட்டார்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உரையைத் தொடர்ந்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்., பிரபாகரன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பேசிய விடயங்களை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு சபா பீடத்திடம் கோரிக்கை விடுத்தார். 
 
இதனையடுத்து அப்போது சபா பீடத்துக்குத் தலைமை தாங்கிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் "சிறிதரன் எம்.பி.யின் உரையில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணான கருத்துக்கள் இருப்பின் அவை ஹன்சாட்டிலிருந்து நீக்கப்படும்" என்று கூறினார். 
 
இதன் பின்னர் உரையாற்றிய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, சிறிதரன் எம்.பி.யின் உரையை கடுமையாகக் கண்டித்துப் பேசினார். பிரபாகரன் தீவிரவாதி அல்லர். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என சிறிதரன் எம்.பி. கூறுகிறார். 
 
இவர்கள் இப்படியான கருத்துகளைத் தொடர்ந்து கூறிவருவதால்தான் வடக்கில் இராணுவத்தினர் நிலைநிறுத் தப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.பி. காட்டம் வெளியிட்டார்.
 
இதேவேளை, விடுதலைப் புலிகளை நினைவுகூரும் கோரிக்கையை உலகம்கூட ஏற்காது என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தெரிவித்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் சிறிதரன் எம்.பியின் உரையை விமர்சித்திருந்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=641682472027727312#sthash.iwoAyh23.dpuf

மாலைமலர் இ-பேப்பர் Epaper 27-NOV-2013 காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 27-NOV-2013 

 

 

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=27112013


                                                 காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு : குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை      

காஞ்சி கொலை வழக்கு,ஜெயேந்திரர், விஜயேந்திரர் விடுதலை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மட பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய பீடாதிபதி விஜயேந்திரர் ஆகியோர் இன்று அவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு நிருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், நீதிபதி சி.எஸ்.முருகன் இன்று இந்தத் தீர்ப்பை அளித்தார்.
இந்த இருவரைத் தவிர இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 21 பேர் மீதான குற்றச்சாட்டுகளையும் அரசு தரப்பு நிருபிக்கத் தவறிவிட்டது என்று கூறி நீதிபதி அவர்களையும் விடுவித்தார்.

வழக்கு தீர்ப்பு இப்படித்தான் அமையுமென்று தாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்தோம் என்று பீடாதிபதிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர்களில் ஒருவரான செந்தில் சுப்ரமணியன் கூறியதாக நமது செய்தியாளர் கோபாலன் தெரிவிக்கிறார். அரசு தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ் , தாங்கள் இந்த வழக்கு குறித்து போதிய சாட்சியங்களை முன்வைத்திருந்ததாகவும், தீர்ப்பு தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் கூறினார். இது குறித்து மேல் முறையீடு செய்வது பற்றி அரசுதான் முடிவெடுக்கும் என்றார் அவர்.
2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி சங்கரராமன் வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலேயே சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். காஞ்சி மடத்தின் முன்னாள் ஊழியரான இவர் , காஞ்சி மடாதிபதியின் மீதும் இளைய மடாதிபதியின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

இந்த கொலை சம்பவத்தை ஒட்டி, காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரை தமிழகப் போலிசார் 2004ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று ஹைதராபாத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது

( thanks BBC Tamil )

செவ்வாய், 26 நவம்பர், 2013

மாலைமலர் இ-பேப்பர் 26-NOV-2013

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  

   இங்கே படிக்கவும்

அல்லது 

மேலே உள்ள
  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

மாலைமலர் இ-பேப்பர் 26-NOV-2013