வெள்ளி, 7 செப்டம்பர், 2012

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்







இலங்கை கடற்படையினரால் வேதாரண்யம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோடியக்கரை அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து சராமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதில் 9 மீனவர்கள் படுகாயம் அடைந்ததுடன் படகுகளும் சேதம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுறது.

இது குறித்து தமிழக மீன்வளத்துறை உதவி ஆணையரிடம் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வாரத்தில் மூன்றாவது முறையாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டு துறையை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 5ம் திகதி, சுமார் 29 படகுகளில் 120 பேராக இவர்கள் சென்றுள்ளனர்.

-------------------------------------------------------------------------

News Link  : 4tamilmedia

-----------------

கருத்துகள் இல்லை: