2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2015 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

TN2016 Elections ADMK தமிழகத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் : சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவு






தமிழகத்தில் அ.தி.மு.க.

-  சி ஓட்டர் கருத்துக்கணிப்பு முடிவு




தமிழகத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியா டிவி-சி ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் அ.தி.மு.க. 

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று 

ஜெயலலிதா முதலமைச்சராக நீடிப்பார் என 

கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க. 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தி.மு.க. 70 தொகுதிகளிலும், விஜயகாந்த் தலைமையிலான அணி 30 முதல் 34  தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வாக்குகளில் அ.தி.மு.க. 39 சதவீத வாக்குகளையும், தி.மு.க. 32 சதவீத வாக்குகளையும் பெறும் என அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.




புதுவையைப் பொருத்தவரையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், அ.தி.மு.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு கூறுகிறது.

செவ்வாய், 1 டிசம்பர், 2015

Maalaimalar ePaper 01DEC2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-DEC-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

ஞாயிறு, 1 நவம்பர், 2015

Maalaimalar ePaper 01-NOV-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-NOV-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

வியாழன், 1 அக்டோபர், 2015

Maalaimalar ePaper 01-OCT-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  01-OCT-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

புதன், 16 செப்டம்பர், 2015

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1692015



இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

“இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக 1-10-2015 மற்றும் 2-10-2015 ஆகிய நாட்களில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வலுவான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்