2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2016 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 1 டிசம்பர், 2016

Maalaimalar ePaper 01-DEC-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-DEC-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

செவ்வாய், 8 நவம்பர், 2016

500 1000 Rupees 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு


08-NOV-2016 இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.






கருப்பு பணம், ஊழல் ஒழிக்கப்படும் என்ற கோஷத்துடன் 2014-ம் தேர்தலை சந்தித்து, வெற்றிப்பெற்று பிரதமர் ஆன நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தன்னுடைய உரையில் இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்தார்.  

மத்தியில ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பலனாக, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே வந்தது. பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில் ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதுபோல், கருப்பு பணத்துக்கு எதிராகவும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும்’ என்றார். அதன்படி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு யார் நிதி உதவி செய்வது? எல்லை தாண்டி, நமது எதிரிகள் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இது பலதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கருப்பு பணத்துக்கு எதிராக புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்றார். 


பிரதமர் மோடி பேசுகையில், மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உடனடியாக நாங்கள் போராடியது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராகவே. தேசத்தில் பண சுழற்சி செயல்முறையானது நேரடியாக ஊழலுடன் தொடர்பு உடையதாக உள்ளது, இது நம்முடைய சமூகத்தில் கீழ்மட்ட மக்களை பாதிக்கிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும். இந்நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க 50 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். 

வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கலாம்.  

நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் மருத்துவமனைகளில் இந்நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக் கொள்ளப்படும். விமானம், ரெயில் டிக்கெட்கள் மற்றும் மருந்தகங்களில் நோட்டுகள் அதுவரையில் பெறப்படும். நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நாட்டில் வங்கிகளில் ஏ.டி.எம். செயல்படாது. நவம்பர் 9-ம் தேதி நாளை அனைத்து வங்கிகளும் மூடப்படும். பொதுமக்கள் சேவைக்காக அந்த ஒருநாள் மட்டும் செயல்படாது. பண பரிவர்த்தனையில் பிற முறைகளான, ’செக்’, டி.டி., கிரிடிட், டெபிட் கார்டுகள் முறையில் எந்தஒரு மாற்றமும் கிடையாது. 

விரைவில் புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். அதிக மதிப்புடைய நோட்டுகளை, குறிப்பிட்ட அளவில் வெளியிட ஆர்.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. 

ஊழலை ஒழிப்பதற்கான பணியை தொடர்ந்து செய்வோம், ஊழல் மற்றும் கருப்பு பணம் விவகாரத்தில் தொடங்கப்பட்ட முயற்சியை வெற்றிகரமாக முடிக்க இணைந்து பணியாற்றுவோம். ஊழலுக்கு எதிராக போராட நாங்கள் விரும்புகின்றோம். அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி பேசினார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் வெளியீடு

நாளை மறுநாள் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவித்துஉள்ளார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது. 

பிரதமர் மோடியை அடுத்து ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் படேல் பேசினார். அவர் பேசுகையில், போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பெருகி வரும் விவகாரத்தினான் ஆபத்து பற்றி கவலையை எழுப்பினார், இதுபோன்ற ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை அதிகரித்து உள்ளோம், எவ்வளவு விரைவில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றார். நாளை மறுநாள் புதுபாதுகாப்பு அம்சங்களுடன் 500 நோட்டுகள் வெளிவரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாதபடி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நோட்டுக்கள் உள்ளன. போதிய எண்ணிக்கையில் நோட்டுக்கள் தயாராக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றன. கள்ள நோட்டு கருப்பு நோட்டு பணம் அதிகரித்துள்ளதை தடுக்க இந்த நடவடிக்கையானது அவசியம். புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே வங்கிகளுக்கு நாளை விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை கொண்டு உள்ளது. புதிய ரூபாய் நோட்டின் மாதிரி வெளியிடப்பட்டு உள்ளது. நாங்கள் நவம்பர் 24-ம் தேதி நிலையை ஆய்வு செய்து வருகிறோம், புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆர்.பி.ஐ. அறிவித்து உள்ளது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

Maalaimalar ePaper 01-NOV-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-NOV-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

சனி, 1 அக்டோபர், 2016

Maalaimalar ePaper 01-OCT-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-OCT-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

2016 எழுக தமிழ்



இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது பேரெழுச்சி கொண்ட “எழுக தமிழ்” வரலாறாகியது
2016-09-25 10:26:37
தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசுக் கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று யாழில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அணிவகுப்பில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப் பட்ட இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னின்று ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் தமது பேராதரவை வழங்கியுள்ளனர்.   

தமிழ் மக்கள் பேர வையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் ஆதரவுடன் \'எழுக தமிழ்” மக்கள் எழுச்சி பேரணி வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பேராதரவுடன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. 

இப் பேரணியை யாழ் நல்லூர் கந்த சுவாமி ஆலய முற்றத்தில் இருந்தும் யாழ் பல்கலைக்கழக பர மேஸ்வரன் ஆலய வளாகத்தில் இருந்தும் இரு அணிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். 

நல்லூரில் இருந்து ஆரம்பித்த பேரணியில் மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் யாழ் பல்கலையில் ஆரம் பிக்கப்பட்ட பேரணியில் மத குருமார்கள், பல்கலை கழக பேராசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பெரும் பேரணியாக சென்றனர்.

பேரணியின் இரு அணியினரும் கந்தர்மடச்சந்தியில் சந்தித்து ஒன்றாக தமது உரிமைக் கோசங்களை எழுப் பியவாறு யாழ் முற்றவெளியை நோக்கி நடை பவனியாகச் சென்றார்கள். முற்பகல் 11.00 மணியளவில் யாழ் முற்ற வெளியை சென்றடைந்த பேரணியுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் தொகை அலை கடலாக காட்சியளித்தது. 

அதனை தொடர்ந்து “எழுக தமிழ்” மக் கள் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில்  போரினால் பாதிக்கப்பட்டு தனது அவயவங்களை இழந்த பொதுமகன் ஒருவர் எழுக சுடரை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி நடைபெற்று தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. 

நிகழ்வின் முக் கிய அம்சமாக “எழுக தமிழ்” பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் வெளியிட்டு வைத் தார்.

அதனை தொடர் ந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த விசேட உரையினை நிகழ்த்தியிருந்தார்.  தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

மக்கள் பிரதிநிதிகளின் உணர்ச்சிபூர்வமான உரைகளுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர்.இறுதியில் அனைத்து மக்களினதும் ஒருமித்த உணர்ச்சிபூர்வமான எழுக தமிழ் கோசத்துடன் பேரணி நிகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை அத்தியாவசிய சேவைகள் கருதி இயங்கிய மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள் தவிர்ந்த ஏனைய வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் எழுக தமிழ் பேரணிக்கு பூரண ஆதரவைத் தெரிவித்து கதவடைப்பை மேற்கொண்டிருந்ததுடன், பல நூறு பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து பேரணிக்கு ஒருமித்த பேராதரவை வழங்கியிருந்தமை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இலட்சியப் பாதைக்கான ஒற்றுமையான பயணத்தினை வெளி உலகத்திற்கு உறுதியாக வெளிப்படுத் தியுள்ளது.

பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் தமது எழுச்சி முழக்கத்தில் இராணுவமே வெளியேறு, பெளத்த மயமாக்கலை உடனே நிறுத்து, காணி சுவீகரிப்பு இனியும் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய், காணாமல்போன எம் உறவுகளுக்கு என்னவாயிற்று என பதில் சொல், நல்லாட்சி அரசாங்கமே நீயும் ஏமாற்றுகிறாயா, சுயாட்சியை வழங்கு, மீனவர்களின் கடல் வளத்தை சுரண்டாதே, சொந்த இடங்களில் எம்மை மீள்குடியமர்த்து,  உள்ளக விசாரணைகள் தேவையில்லை, சர்வதேச விசாரணையே தேவை என பல்வேறுபட்ட உரிமை கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்காக பேரணி ஏற்பாட்டுக் குழுவினரால் போக்குவரத்து ஒழுங்குகள், குடிநீர் வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையிலும் பேரணி எழுச்சிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெருமளவான பொலிஸார் வீதிக்கடமைகளில் ஈடுபட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.         (செ-4-9)




THANKS   :  வலம்புரி / Valampuri

Valampuri ePaper வலம்புரி 25-SEP-2016

Dinamani Kathir தினமணிக்கதிர் : 21 ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை'



'21 ஆம் நூற்றாண்டுத் தமிழ் வகுப்பறை' : 

தினமணிக்கதிர் :(25.09.2016)

மலேசியா - வாசுதேவன் இலட்சுமணன் 
- தர்மபுரி மாவட்ட ஊடகவியலாளர் திரு.சா.ஜெயப்பிரகாஷ் & படம் : யூ.கே.ரவி 



=======================================================
நன்றி
தினமணிக்கதிர் :(25.09.2016)


வியாழன், 22 செப்டம்பர், 2016

Maalaimalar ePaper மாலைமலர் இ-பேப்பர் 22-SEP-2016

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  22-SEP-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

புதன், 21 செப்டம்பர், 2016

காவிரி : தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு



சுப்ரீம் கோர்ட்டில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருப்பினும் 21-ந் தேதி(இன்று) முதல் 27-ந்தேதி வரை 7 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

வியாழன், 1 செப்டம்பர், 2016

Maalaimalar ePaper 01-SEP-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-SEP-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

புதன், 3 ஆகஸ்ட், 2016

Maalaimalar ePaper 03-AUG-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  03-AUG-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================

ஞாயிறு, 3 ஜூலை, 2016

Maalaimalar ePaper 03-JULY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  03-JULY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================

புதன், 15 ஜூன், 2016

2016 CM Jaya Meets PM ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு

ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு: 94 பக்கங்கள்! 29 அம்சங்கள்! முக்கியமானவை என்ன?




நேற்று நடைபெற்ற ஜெயலலிதா-நரேந்திர மோடி சந்திப்பின் போது,ஜெயலலிதா 94 பக்கங்களைக் கொண்ட, 29 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார்.



அந்த மனுவின் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
  • காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
  • கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும்.
  • தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
  • நதிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட வேண்டும்
  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்க வேண்டும்.
  • கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் மறு சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்த வேண்டும்.
  • கூடங்குளம் அணுமின் நிலைய இரண்டாவது கட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
  • தமிழை நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
  • மெட்ரோ இரயில் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் – முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
  • பறக்கும் ரயில் – மோனோ இரயில் – சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க வேண்டும்.
  •  ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்சேவை வரி மீதான மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.
  •  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது
  •  அரசு நடத்தும் தொலைக்காட்சி இணைப்பு (கேபிள்) சேவைக்கு டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் உரிமம் அளிக்கப்பட வேண்டும்.
  • கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.
  • தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
  • மற்ற சில அம்சங்கள் வெள்ள நிவாரணம், தமிழகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளாகும்.


பிரதமருடனான தனது சந்திப்பை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின்னர் மத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்தார்.
தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு நேற்றிரவே ஜெயலலிதா சென்னைக்கு தனி விமானம் மூலம் திரும்பினார்.



Thanks : Selliyal   ( http://www.selliyal.com/archives/131545 )


திங்கள், 13 ஜூன், 2016

Tamil Sanskrit “சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்” திமுக தலைவர் கருணாநிதி.

சென்னை – “சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்” என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
திமுக மருத்துவ அணிச் செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு உரையாற்றிய கருணாநிதி, “தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத் தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் “சவுக்கை”எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும். அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால், எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார்.”
“அப்படிப்பட்ட வீரர், அப்படிப்பட்ட கொள்கைவாதி, அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர், அந்த ஆலடி அருணாவின் இல்ல விழாவில் தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற ஆலடி அருணாக்கள் வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள்.”
“அதற்கு நாம் துணை போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்.” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 12 ஜூன், 2016

7 பேர் விடுதலை கோரி பேரணி!

7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!

சென்னை – ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00 (இந்திய நேரம்) அளவில் சென்னை கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று வேலூரில் இருந்து, சென்னை கோட்டை நோக்கி வாகனப் பேரணியாக நடைபெறவிருந்த இந்தப் பேரணி இறுதி நேரத்தில் காவல் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க, தொடங்கும் இடம் சென்னையிலேயே இராஜரத்தினம் அரங்கம் என மாற்றப்பட்டது.
கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பேரணியில் பல திரைப்பட இயக்குநர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பேரணி முடிவடையும்போது, பேரணியின் பிரதிநிதிகளை தமிழக அரசு சார்பில் சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், ஜெயலலிதா நேரடியாக பேரணி பிரதிநிதிகளைச் சந்திப்பாரா அல்லது அவரது அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் பெற்றுக் கொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

வெள்ளி, 3 ஜூன், 2016

Maalaimalar ePaper 03-JUNE-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  03-JUNE-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !



=======================================================

திங்கள், 23 மே, 2016

2016 Jayalalithaa sworn in as Tamil Nadu CM today. தமிழக முதல்வராக இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார்.

தமிழக முதல்வராக 6வது முறையாக

இன்று திங்கட்கிழமை மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றார்.

அவருக்கு தமிழக ஆளுநர் ரோசைய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்ற்றாண்டு விழா மண்டபத்தில் நடந்தது.
சரியாக மதியம் 12 மணிக்கு நடந்த இந்த பதவியேற்பு நிகழ்வில், ஆளுநர் ரோசய்யா, ஜெயலலிதாவுக்குப் பதவியேற்பு உறுதிமொழியும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
இரு பிரமாணங்களையும் " ஆண்டவன் மீது ஆணையிட்டு" என்று கூறி பிரமாணம் எடுத்துகொண்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அவருடைய அமைச்சரவையில் நியமிக்கப்பட்டிருக்கும் 28 அமைச்சர்களும் கூட்டாக " ஆண்டவன் மீது ஆணையிட்டு" பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து கொண்டனர்.
இரு குழுக்களாக அவர்கள் இந்தப் பிரமாணங்களை எடுத்துக்கொண்டனர். முதலில் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 15 அமைச்சர்களும், பின்னர் மற்ற 13 அமைச்சர்களும் கூட்டாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாஜக உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

சனி, 21 மே, 2016

Maalaimalar ePaper 21-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  21-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

வெள்ளி, 20 மே, 2016

Maalaimalar ePaper 20-MAY-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  20-MAY-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================

2016 TAMILNADU ASSEMBLY ELECTION

அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்: 


அதிமுக: 134 


திமுக : 89 


காங்கிரஸ்: 8 




சென்னை – தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி நிலவர அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:

அதிமுக  – 134

திமுக       –  89

காங்கிரஸ் – 08

இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் – 01