செவ்வாய், 8 நவம்பர், 2016

500 1000 Rupees 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு


08-NOV-2016 இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.






கருப்பு பணம், ஊழல் ஒழிக்கப்படும் என்ற கோஷத்துடன் 2014-ம் தேர்தலை சந்தித்து, வெற்றிப்பெற்று பிரதமர் ஆன நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தன்னுடைய உரையில் இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்தார்.  

மத்தியில ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பலனாக, ரூ.65 ஆயிரம் கோடி கருப்பு பணம் வெளியே வந்தது. பிரதமர் மோடி சமீபத்தில் பேசுகையில் ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தியதுபோல், கருப்பு பணத்துக்கு எதிராகவும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்தப்படும்’ என்றார். அதன்படி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களுக்கு யார் நிதி உதவி செய்வது? எல்லை தாண்டி, நமது எதிரிகள் கள்ள நோட்டுகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு உதவுகிறார்கள். இது பலதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களை அடையாளம் கண்டறியும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கருப்பு பணத்துக்கு எதிராக புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்றார். 


பிரதமர் மோடி பேசுகையில், மத்தியில் ஆட்சியில் அமர்ந்ததை தொடர்ந்து உடனடியாக நாங்கள் போராடியது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிராகவே. தேசத்தில் பண சுழற்சி செயல்முறையானது நேரடியாக ஊழலுடன் தொடர்பு உடையதாக உள்ளது, இது நம்முடைய சமூகத்தில் கீழ்மட்ட மக்களை பாதிக்கிறது. இன்று இரவு 12 மணிக்கு மேல் ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும். இந்நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க 50 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதிவரையில் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யலாம். 

வங்கிகளில் ஏற்றுக் கொள்ளப்படாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கலாம்.  

நவம்பர் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் மருத்துவமனைகளில் இந்நோட்டுகள் பெற்றுக் கொள்ளப்படும். பெட்ரோல் பங்குகளில் ஏற்றுக் கொள்ளப்படும். விமானம், ரெயில் டிக்கெட்கள் மற்றும் மருந்தகங்களில் நோட்டுகள் அதுவரையில் பெறப்படும். நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நாட்டில் வங்கிகளில் ஏ.டி.எம். செயல்படாது. நவம்பர் 9-ம் தேதி நாளை அனைத்து வங்கிகளும் மூடப்படும். பொதுமக்கள் சேவைக்காக அந்த ஒருநாள் மட்டும் செயல்படாது. பண பரிவர்த்தனையில் பிற முறைகளான, ’செக்’, டி.டி., கிரிடிட், டெபிட் கார்டுகள் முறையில் எந்தஒரு மாற்றமும் கிடையாது. 

விரைவில் புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும். அதிக மதிப்புடைய நோட்டுகளை, குறிப்பிட்ட அளவில் வெளியிட ஆர்.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. 

ஊழலை ஒழிப்பதற்கான பணியை தொடர்ந்து செய்வோம், ஊழல் மற்றும் கருப்பு பணம் விவகாரத்தில் தொடங்கப்பட்ட முயற்சியை வெற்றிகரமாக முடிக்க இணைந்து பணியாற்றுவோம். ஊழலுக்கு எதிராக போராட நாங்கள் விரும்புகின்றோம். அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி பேசினார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் வெளியீடு

நாளை மறுநாள் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி இன்று நள்ளிரவு முதல் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளை டிசம்பர் 30-ந் தேதிக்குள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் செலுத்தலாம் என்று அறிவித்துஉள்ளார். மத்திய அரசின் இந்நடவடிக்கைக்கு பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கிஉள்ளது. 

பிரதமர் மோடியை அடுத்து ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் படேல் பேசினார். அவர் பேசுகையில், போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பெருகி வரும் விவகாரத்தினான் ஆபத்து பற்றி கவலையை எழுப்பினார், இதுபோன்ற ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிப்பை அதிகரித்து உள்ளோம், எவ்வளவு விரைவில் புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க முயற்சி செய்து வருகிறோம் என்றார். நாளை மறுநாள் புதுபாதுகாப்பு அம்சங்களுடன் 500 நோட்டுகள் வெளிவரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாதபடி புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் நோட்டுக்கள் உள்ளன. போதிய எண்ணிக்கையில் நோட்டுக்கள் தயாராக உள்ளது. புதிய ரூபாய் நோட்டுகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றன. கள்ள நோட்டு கருப்பு நோட்டு பணம் அதிகரித்துள்ளதை தடுக்க இந்த நடவடிக்கையானது அவசியம். புதிய நோட்டுக்களை வங்கிகளுக்கு கொண்டு சேர்க்கவே வங்கிகளுக்கு நாளை விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகள் புதிய அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பரிமாணங்களை கொண்டு உள்ளது. புதிய ரூபாய் நோட்டின் மாதிரி வெளியிடப்பட்டு உள்ளது. நாங்கள் நவம்பர் 24-ம் தேதி நிலையை ஆய்வு செய்து வருகிறோம், புதிய ரூபாய் நோட்டுகளை நவம்பர் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று ஆர்.பி.ஐ. அறிவித்து உள்ளது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

Maalaimalar ePaper 01-NOV-2016 மாலைமலர் இ-பேப்பர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  1-NOV-2016


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர் 

 

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !


ePaper       <<<<<<<

=======================================================