சனி, 21 பிப்ரவரி, 2015

Jessica Gifts her Prize ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4 - தமிழக, ஈழ ஆதரவற்ற குழந்தைகளுக்கு தங்கத்தை தாரைவார்த்து கொடுத்த ஜெசிக்கா

சென்னை: 
 
தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற "ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4" நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமியான ஜெசிகா. ஆனால் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து தமிழர் நெஞ்சில் நீங்காத முதலிடத்தைப் பெற்றுவிட்டார்..
 
 
 கனடா வாழ் ஈழத் தமிழராக இக்குழந்தையின் பாடல்களில் அரங்கம் மட்டுமல்ல, டிவி வழியாக இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனமுள்ள மனிதர்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். அந்தக் குழந்தையின் உருக வைக்கும் குரலும், சோகம் கலந்த கானமும் கல்லையும் கரைய வைத்திருக்கும் என்பது

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jessica-gifts-her-prize-tamil-children-sri-lanka-221447.html

புதன், 18 பிப்ரவரி, 2015

#தமிழ்வாழ்க : ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்



#தமிழ்வாழ்க

ட்விட்டரில் வியப்பு: இந்திய அளவில் #தமிழ்வாழ்க முதலிடம்

 

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழிலேயே ஒரு ஹேஷ்டேக், இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் (போக்கு) முதல் முறையாக முன்னிலை வகித்துள்ளது.

பொதுவாக, அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் கருப்பொருளையொட்டிய சொற்களால் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக்குகள் (#) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலோ, உலக அளவிலோ முதல் 10 இடங்களை வகிப்பது வழக்கம்.

அதாவது, ஒரு குறிப்பிட்டை ஹேஷ்டேக் சொற்கள் தொடர்பாக நொடிக்கு 20-க்கும் மேற்பட்ட குறும்பதிவுகள் இடப்படும்போது, அந்தச் சொற்கள் ட்ரெண்டிங்கில் வலம் வரும்.

கடந்த சில ஆண்டுகளாக, ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவை அனைத்துமே ஆங்கில மொழியில்தான் அரங்கேற்றப்படும். ஆனால், சில தினங்களாக இந்திய மொழிகளுக்கும் ட்ரெண்டிங்கில் முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறது ட்விட்டர். 

அந்த வகையில், முதலில் இந்தி மொழி சொல் ட்ரெண்டிங்கில் வலம் வந்தன. அதைக் கண்ட தமிழ் இணையவாசிகள், தமிழில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்டிங்கில் வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதை ட்விட்டரும் ஏற்றுக்கொண்டு தமிழில் 'போக்கு' காண்பிக்க ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில், முதலில் உருவாக்கப்பட்ட தமிழ் ஹேஷ்டேக் சொல் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது #தமிழ்வாழ்க எனும் ஹேஷ்டேக். 



ட்விட்டரில் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியவர் சுடர்கொடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, திமுக தலைவர் கருணாநிதி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும் உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு. #தமிழ்வாழ்க" என்று குறும்பதிவிட்டு, தமிழ் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தார்.

இந்திய நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் #தமிழ்வாழ்க என்ற சொல், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது கவனிக்கத்தக்கது.

 

Thinakkural ePaper 18FEB2015 தினக்குரல் #தமிழ்வாழ்க


#தமிழ்வாழ்க

 http://epaper.thinakkural.lk/ 


http://epaper.thinakkural.lk/

திங்கள், 16 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் வளர்மதி அமோக வெற்றி !


ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 96 ஆயிரத்து 417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் வளர்மதி திமுக வேட்பாளர் ஆனந்தை விட முன்னிலை வகித்து வந்தார்.


23 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 461 வாக்குகள் பெற்றார்.

இதேபோல் திமுக வேட்பாளர் ஆனந்த் 55 ஆயிரத்து 44 வாக்குகளும், பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் 4 ஆயிரத்து 834 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆயிரத்து 466 வாக்குகளும் பெற்றனர். 2011ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தேர்தலைக் காட்டிலும், ஏறக்குறைய 12 சதவீத வாக்குகளை அதிமுக அதிகம் பெற்றுள்ளது.

=====================================================




ஸ்ரீ ரங்கம் இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி 1,51,561 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

தனக்கு அடுத்ததாக வந்த தி.மு.க. வேட்பாளர் என். ஆனந்தைவிட 96,516 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

தி.மு.க. வேட்பாளர் என் ஆனந்த் 55,045 வாக்குகளையும் பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளர் எம். சுப்ரமணியம் 5,015 வாக்குகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே. அண்ணாதுரை 1552 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

சுயேச்சையாகப் போட்டியிட்டவர்களில் டிராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் 1167 வாக்குகளை பெற்றுள்ளார்.

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதைக் குறிக்கும் நோட்டாவுக்கு 1919 வாக்குகள் விழுந்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட அதிக வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இதில் தி.மு.கவைத் தவிர, மற்ற அனைத்துக் கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன.

அ.தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் கோஷங்களை எழுப்பியும் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அ.தி.மு.கவின் தலைமையத்திலும் ஜெயலலிதாவின் இல்லம் முன்பாகவும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர


================================================================
       

ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வளர்மதி 96 ஆயிரத்து 417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே அதிமுக வேட்பாளர் வளர்மதி திமுக வேட்பாளர் ஆனந்தை விட முன்னிலை வகித்து வந்தார். 23 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுகவைச் சேர்ந்த வளர்மதி ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 461 வாக்குகள் பெற்றார். இதேபோல் திமுக வேட்பாளர் ஆனந்த் 55 ஆயிரத்து 44 வாக்குகளும், பாரதிய ஜனதா வேட்பாளர் சுப்பிரமணியம் 4 ஆயிரத்து 834 வாக்குகளும், கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை ஆயிரத்து 466 வாக்குகளும் பெற்றனர். 2011ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் தேர்தலைக் காட்டிலும், ஏறக்குறைய 12 சதவீத வாக்குகளை அதிமுக அதிகம் பெற்றுள்ளது.
     
- See more at: http://www.ns7.tv/ta/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF#sthash.TPmalrwa.dpuf

இந்தியா - இலங்கை இடையே 4 புதிய ஒப்பந்தங்கள் !

இந்தியா - இலங்கை இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட 4 புதிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின. பிரதமர் மோடி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இடையிலான பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்த இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார். பிரதமர் அளித்த மதிய விருந்தில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். இருதரப்பு உறவுகள் குறித்து அப்போது இருவரும் விவாதித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, இந்தியா - இலங்கை இடையே, 4 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட முடிவு செய்யப்பட்டது. அணுசக்தி ஒத்துழைப்பு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு இலங்கையின் பங்களிப்பு, விவசாயம் மற்றும் கலாசாரத்துறை ஆகியவற்றில் புதிதாக 4 ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் சிறிசேனாவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்துப் பேசினர். அப்போது, இலங்கை அரசு தனது முதலாவது அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவுடன் செய்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதில், இரு நாடுகளும் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இருநாட்டு மீனவர்களும் விரைவில் பேச்சு நடத்துவார்கள் எனக் குறிப்பிட்டார். பின்னர் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, இந்தியா - இலங்கை இடையே நீண்டகாலமாக நெருங்கிய நட்புறவு இருப்பதாக தெரிவித்தார். இந்தியா - இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் அமலில் இருந்தாலும், புதிதாக 4 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் இரு நாட்டு உறவு மேலும் வலுப்படும் என  சிறிசேனா குறிப்பிட்டார்.


Thinakkural ePaper 16FEB2015 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


தினக்குரல்

சனி, 14 பிப்ரவரி, 2015

Maalaimalar ePaper 14-FEB-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  14-FEB-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 


>>>  http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1422015

வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

Srirangam Elections 2014 ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்

இணையத்தில் படித்தது
 
ஸ்ரீரங்கம் -   
 
ஒரு கட்சிக்கு வெற்றி வித்தியாசத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆசை. ஒரு கட்சிக்கு டெபாசிட்டாவது வாங்கிவிட வேண்டும் என்று ஆசை. 
ஒரு கட்சிக்கு கடந்த தேர்தலை விட 100 ஓட்டுகளாவது கூட வாங்க வேண்டும் என்று ஆசை.
===============================================================


அமைதியாக நடந்த ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 82.54 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அன்றே முடிவும் அறிவிக்கப்பட உள்ளது. 


2011ல் 80.95 சதவீத வாக்குகள் பதிவாகின. தற்போது அதைவிட 1.59 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகி உள்

Maalaimalar ePaper 13-FEB-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  13-FEB-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 


>>>  http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1322015

வியாழன், 12 பிப்ரவரி, 2015

Maalaimalar ePaper 12-FEB-2015 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  12-FEB-2015


  

மேலே உள்ள 

 


இ-பேப்பர்

>>>>  மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 


>>>  http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1222015

வியாழன், 5 பிப்ரவரி, 2015