2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2012 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜனவரி, 2012

KLIA Tamil Announcement கோலாலம்பூர் விமான நிலையத்தில் தமிழ் மொழி அறிவிப்பு

கோலாலம்பூர் விமான நிலையம் மற்றும் ஏர் ஆசியா குறைந்த கட்டண விமான முனையம் ஆகிய நிலையங்களில் தமிழ் மொழி அறிவிப்பு 01-ஜனவரி-2012 தொடங்கியது.

பொங்கல் மிகை ஊதியம் Pongal Bonus for TN Govt Staff

பொங்கல் மிகை ஊதியம்  ( Pongal Bonus )


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் குறித்த அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா ( 01-Jan-2012 ) வெளியிட்டுள்ளார். அதில் சி.மற்றும் டி.பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு 30-நாள் ஊதியத்திற்கு இணையாக 3-ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ஏ.மற்றும் பி. பிரிவு அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கவும்;, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவரகள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு 500-ரூபாயாக பொங்கல் பரிசு வழங்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




இதேபோன்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொகுப்பு ஊதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

Malaysia : மக்கள் ஓசை இ பேப்பர் Makkal Osai 2012

2012

மக்கள் ஓசை இ பேப்பர்  

Malaysia Makkal Osai   ( new website for ePaper )


" மலேசியா" மக்கள் ஓசையின் இ-பேப்பர் புதிய இணையதளம்:

                                    இங்கே படிக்கலாம் !  வாங்க !!



BlogPosts with Makkal Osai Label : To Read click Here

---

புதன், 7 டிசம்பர், 2011

நல்லுறவைக் கெடுக்காதீர்கள்: முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

தினத்தந்தி




தினமணி

சென்னை, டிச.6:

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையைக் காரணம் காட்டி, தமிழக-கேரள மாநில மக்களிடையேயான நல்லுறவைக் கெடுக்க வேண்டாம் என முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மேலும், இந்தப் பிரச்னை தொடர்பாக தேவையற்ற கருத்துகளைத் தவிர்க்கும்படியும் தமிழக அரசியல் கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிக்கை: "சபரிமலைக்குச் சென்ற தமிழக பக்தர்களைக் கேரள மாநிலத்ததவர் தாக்கியதாகச் செய்திகள் எனது கவனத்துக்கு வந்துள்ளன. தமிழக அரசின் பதிவெண் கொண்ட வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, கேரளத்தில் உள்ள தமிழர்களின் வணிக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், பணி நிமித்தமாக அங்கு வசிப்பவர்கள் என அனைவரும் மிரட்டப்படுகின்றனர். அவற்றுக்கெல்லாம் காரணம், இரு மாநிலங்களுக்கு இடையேயான முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையாகும்.குறுகிய மனப்பான்மை கொண்ட சில சமூக விரோத சக்திகளின் தவறான பிரசாரத்துக்கு கேரளத்தில் உள்ள படித்த மற்றும் அறிவாளியான மக்கள் இரையாகிவிடக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையைக் காட்டி, வன்முறைச் சம்பவங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை, கற்பனையானவை, நிரூபிக்கப்படாத கூற்றுகளால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற அச்சமாகும். அரசியல் ஆதாயங்களுக்காக அதுபோன்ற கருத்துகள் பரப்பப்படுகின்றன.

அணை உடையுமா:
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்றோ அல்லது அது உடைந்து இடுக்கி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் மூழ்கும் என்றோ நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அணை அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையில் தேவையான காலத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அணை பாதுகாப்பாக உள்ளது. அணையின் ஸ்திரத் தன்மையை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள நிபுணர் குழு ஆய்வு செய்துள்ளது. அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணை 116 ஆண்டுகள் பழமையானது என்பதால் அதன் உறுதித்தன்மை குறித்து ஐயப்பாடு எழுப்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கல்லணையானது, உலகத்திலேயே மிகவும் பழமையான அணையாகும். காவிரி ஆற்றின் குறுக்கே கரிகால் சோழனால் அந்த அணை கட்டப்பட்டது. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணை முழுப் பாதுகாப்புடன் இருக்கிறது. கல்லணையானது சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்டது. அது உறுதித் தன்மையுடன் இருக்கிறது. இதேபோன்றுதான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டுள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணையானது பழமையான முறையில் கட்டப்பட்டது என்றோ, அதிக ஆண்டுகள் ஆகியுள்ளதால் இடிந்துவிடும் என்றோ அச்சப்படுவது தேவையற்றது.


அணை நீண்ட காலம் நல்ல முறையில் பயன்படும் என்பதால்தான் அப்போதைய சென்னை மற்றும் திருவாங்கூர் மாகாணங்களுக்கிடையே 999 ஆண்டுகளுக்குத் தண்ணீர்ப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

நிலநடுக்கப் பகுதியில் அணை இருப்பதாகக் கூறப்படும் வதந்தியின் காரணமாக மக்களிடையே மிகப்பெரிய அளவில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் தொடர்பான வரைபடம் இணையதளத்தில் அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கேரள மாநிலம் முழுவதும், சென்னை உள்பட இந்தியாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளும் நில நடுக்க மண்டலம் 3-ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சாதாரண நில அதிர்வுகள் மட்டுமே ஏற்படும்; அந்த நில அதிர்வுகள் கூட ரிக்டர் அளவுகோலில் அரிதாகவே 3 அலகுகளைத் தாண்டும். ரிக்டர் அளவுகோலில் 2 முதல் 2.9 அலகுகள்வரை பதிவாகும் நில அதிர்வுகள் பொதுவாக உணரப்படுவதில்லை; அவை வெறுமனே பதிவு மட்டுமே செய்யப்படுகின்றன. வானிலை ஆய்வு மைய புள்ளிவிவரங்களின்படி, அத்தகைய நில அதிர்வுகள் உலகம் முழுவதும் ஒவ்வொரு நிமிஷமும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 3 முதல் 3.9 அலகுகள் வரை பதிவாகும் நில அதிர்வுகள் பெரும்பாலும் உணரப்படும், ஆனால் அரிதாகவே பாதிப்புகளை ஏற்படுத்தும். அதுபோன்ற நில அதிர்வுகள் கூட அடிக்கடி ஏற்படுபவைதான் என்பதால், இதில் அச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனவே, நில நடுக்கத்தின் காரணமாக முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும் என்ற அச்சம் எந்த அடிப்படையும் இல்லாதது.

இந்த உண்மைகள் கேரளத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்தவைதான். இருந்தாலும், அரசியல் ஆதாயத்துக்காக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் அச்ச உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் தமிழகத்தின் நெருங்கிய அண்டை மாநிலம் ஆகும். குறிப்பாக 1950 வரை இரு மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. மலையாளிகளும், தமிழர்களும் பொதுவான மொழி, கலாசாரத்தைக் கொண்டவர்கள். கேரளத்தில் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழகத்தில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான மலையாளிகள் வசிக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் இருதரப்பினரும் சகோதர உணர்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் பேரழிவுக்குள்ளாக வேண்டும் என்று கருதும் கடைசி நபர்களாக தமிழக அரசும், தமிழக மக்களும் இருப்பார்கள். எங்களிடம் முழுமையான ஆதாரங்கள் இல்லையென்றால், அந்த அணை பாதுகாப்பாக உள்ளது என்று கூறமாட்டோம்.


கேரள மக்களுக்கு வேண்டுகோள்:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கெடுக்கும் வகையிலான செயல்களுக்குக் கேரள மக்கள் உடன்பட வேண்டாம். கற்பனையான ஒரு விஷயத்துக்காக வன்முறையிலோ, மோதல் சம்பவங்களிலோ ஈடுபட வேண்டாம். இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லுறவு, நல்லெண்ணம் ஆகியவற்றைப் பாழாக்கி விடக்கூடாது. புத்திகூர்மை, கல்வி, கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள - நான் என்றென்றும் மதிப்பு வைத்துள்ள - கேரள மக்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக விடுக்கிறேன்.


கட்சிகளுக்கு கோரிக்கை:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரு மாநில மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுகளைத் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். பத்திரிகைகளும் இந்த விஷயத்தில் நடுநிலையோடும், சுயக்கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்' என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்
.


Thanks to Dinamani .

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தமிழக எல்லையில் பதற்றம்






Dinakaran

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக& கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ( Dinakaran )
----

மக்கள் ஓசை

------

ஞாயிறு, 13 நவம்பர், 2011

இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம் !

இலங்கையில் சமாதான முயற்சிகள் சீர்குலைய இந்தியாவே காரணம்  !

நோர்வே அறிக்கை - "அமைதியின் பகடைகள் " Pawns of Peace




 
சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கும், தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போருக்கு இந்தியாவின் மெளன சம்மதமே காரணமென்றும் நார்வே அரசு அமைத்த குழு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சர்வதேச ஆதரவுடன் இலங்கையில் அமைதி ஏற்படுத்த நார்வே அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது ஏன் என்பது பற்றி ஆராய நார்வே அரசு அமைத்த குழு தனது அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது.

நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, அமைதியின் பகடைகள் ‘ (Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, நார்வே தலைநகர் ஒஸ்லோவிலநேற்று வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாஇருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நார்வே அரசின் அதிகாரப்பூர்வ ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கையில் தமிழர் அழித்தொழிக்கப்பட்டதில் இந்திய அரசு வகித்த பங்கு ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tamil Webduniahttp://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1111/12/1111112032_1.htm






மக்கள் ஓசை  Makkal OSai Epaper 13-NOV-2011  ( page 15 )


To read Makkal Osai Epaper 13-Nov-2011 - Click here











 

செவ்வாய், 8 நவம்பர், 2011

இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குக ! ஜெயலலிதா கடிதம்

இலங்கை அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குக !
மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம்



உதயன் ( 8Nov)


பிரபாகரன் பெயரில் சத்திய பிரமாணம் ! -- உதயன் ( 8Nov)

புதன், 2 நவம்பர், 2011

மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப் பிரதமர்

மகிந்தவின் அழைப்புரையை புறக்கணித்து வெளியேறினார் கனேடியப்

பிரதமர்.



01-Nov-2011 - விளம்பரம்


அழைப்புரையாற்ற மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டதும், கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.



விளம்பரம் பத்திரிக்கை கனடா , ரொறொன்ரோ நகரிலிருந்து மாதமிருமுறை 1ஆம் , 15ஆம் திகதிகளில் இலவசமாக வெளிவருகின்றது.



# தற்போதிய இதழ் ( Current Issue )


# ஆவணக்காப்பகம் ( Archives )


---------------------------------------------------------------------------------------
To read Vlambaram in Mobile - Please scan the QR Code



-------------------------------------------------------------------------------------------





01-Nov-2011 - விளம்பரம்

அழைப்புரையாற்ற மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டதும், கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்தனர்.







விளம்பரம் பத்திரிக்கை கனடா , ரொறொன்ரோ நகரிலிருந்து மாதமிருமுறை 1ஆம் , 15ஆம் திகதிகளில் இலவசமாக வெளிவருகின்றது.




# தற்போதிய இதழ் ( Current Issue )
# ஆவணக்காப்பகம் ( Archives )
----------------





To read Vlambaram in Mobile - Please scan the QR Code









----------------------------------------------------------------------------------------

சனி, 22 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க வெற்றி !

உள்ளாட்சித் தேர்தல் - அ.தி.மு.க வெற்றி !

காங்கிரஸ் - படுதோல்வி - டெபொசிட் காலி !!






------------------------------------------------------------------------

- "காங்கிரஸ் ஒரு காலி பெருங்காய டப்பா " - மக்கள் ஓசை நாளிதழ்

பெருங்காய டப்பா - அதுக்கு கூட ஒரு "வாசனை" இருக்கும் ! ஆனால் காங்கிரஸ் ??


தமிழகத்தில், காங்கிரஸ், மா.கம்யூ., -இ.கம்யூ.,- பா.ம.க., - வி.சி., ஆகியவை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன

------------------------------------------------------------------------------------


ம.தி.மு.க - வளரும் கட்சி ! ( MDMK - Vaiko )

உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்தித்து, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடமும், திருப்பூர், வேலூர், கோவை மாநகராட்சிகளில் நான்காவது இடத்தையும் பிடித்து, ம.தி.மு.க., தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த தேர்தலில் பெரிய கட்சிகளாக கூறிக் கொண்ட தே.மு.தி.க., - பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் போன்றவை படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், ம.தி.மு.க., தனித்துப் போட்டியிட்டு 150 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியிருப்பது, அக்கட்சியினருக்கு புது தெம்பை அளித்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய ம.தி.மு.க., இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இதில் கணிசமான வெற்றியை பெற முடியாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கும்.
எனினும், எதிர்பார்த்ததை விட கூடுதல் இடங்களை ம.தி.மு.க., பிடித்துள்ளது. நேற்று மாலை 6.30 மணி நிலவரப்படி, மாநகராட்சிகளில் எட்டு கவுன்சிலர் பதவிகளையும், ஒரு நகராட்சித் தலைவர் பதவியையும், 48 நகராட்சி உறுப்பினர் பதவிகளையும், ஏழு பேரூராட்சி தலைவர் பதவிகளையும், 82 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளையும், நான்கு ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளையும் வென்றுள்ளது.

இது, ம.தி.மு.க.,வுக்கு அடிமட்டத்தில் இன்னும் செல்வாக்கு உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது
----------------------------------------------------------------------------------

புதன், 19 அக்டோபர், 2011

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் : மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா USA warns srilanka



இலங்கையின் மனித உரிமை மீறல்கள்; பதிலளிக்காவிடின் அழுத்தம் அதிகரிக்கும்; மீண்டும் எச்சரிக்கிறது அமெரிக்கா

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசு உடனடியாக பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.






நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் பிரதிப் பேச்சாளர் மார்க்ரோனர், சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை இலங்கை வழங்கத் தவறும் பட்சத்தில் சர்வதேச அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:

இலங்கை அரசால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க மற்றும் விசாரணை ஆணைக் குழுவின் அறிக்கை இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்குச் சரியான பதிலாக இருக்குமா என்பது குறித்து அமெரிக்காவால் இப்போதைக்குக் கருத்து எதனையும் கூறமுடியாது. அந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே எதனையும் கூறமுடியும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசின் விசாரணைகள் வெளிப்படையானது என்பதை நிரூபிக்கவேண்டிய தேவை உள்ளது.

இலங்கை அரசு அந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறினால், சுதந்திரமான பொறிமுறை குறித்த அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டுக்குள்ளேயே இதைச் செய்யவேண்டியது முக்கியமானது. இலங்கை அதனைத் தானாகவே செய்துகொள்ளும் என்ற நம்பிக்கை இன்னும் எமக்கு உள்ளது.அதை அவர்கள் செய்யாது போனால், நாங்கள் பலமுறை கூறியது போன்று, ஏனைய பல பொறிமுறைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான அனைத்துலக அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

-----------

Thanks :  Uthayan Newspaper  & Yarl.com  website

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

Execution Stayed தடை விதித்து சென்னை ஐகோர்ட் & Assembly Resolution





சென்னை:

ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாலை மலர் :



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

அன்னா ஹசாரே - 15 நாள் உண்ணாவிரதம்

1)








2)
  

Wiki : குடி மக்கள் காப்பு முன்வரைவு  (லோக்பால் மசோதா )

குடி மக்கள் காப்பு முன்வரைவு இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்ததில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதா ஆகும்.