ஈழம் / Eelam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் / Eelam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

2016 எழுக தமிழ்



இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது பேரெழுச்சி கொண்ட “எழுக தமிழ்” வரலாறாகியது
2016-09-25 10:26:37
தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்கு முறைகளைக் கண்டித்தும் தமிழ் மக்களின் அபிலாசைகளை அரசுக் கும் சர்வதேசத்துக்கும் வெளிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று யாழில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அணிவகுப்பில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப் பட்ட இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேரணியினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னின்று ஆரம்பித்து வைத்திருந்ததுடன், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல்வேறுபட்ட தரப்பினரும் தமது பேராதரவை வழங்கியுள்ளனர்.   

தமிழ் மக்கள் பேர வையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் ஆதரவுடன் \'எழுக தமிழ்” மக்கள் எழுச்சி பேரணி வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான பேராதரவுடன் நேற்றையதினம் யாழில் முன்னெடுக்கப்பட்டது. 

இப் பேரணியை யாழ் நல்லூர் கந்த சுவாமி ஆலய முற்றத்தில் இருந்தும் யாழ் பல்கலைக்கழக பர மேஸ்வரன் ஆலய வளாகத்தில் இருந்தும் இரு அணிகளாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். 

நல்லூரில் இருந்து ஆரம்பித்த பேரணியில் மதகுருமார்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதுடன் யாழ் பல்கலையில் ஆரம் பிக்கப்பட்ட பேரணியில் மத குருமார்கள், பல்கலை கழக பேராசிரியர்கள், மாணவர்கள் ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பெரும் பேரணியாக சென்றனர்.

பேரணியின் இரு அணியினரும் கந்தர்மடச்சந்தியில் சந்தித்து ஒன்றாக தமது உரிமைக் கோசங்களை எழுப் பியவாறு யாழ் முற்றவெளியை நோக்கி நடை பவனியாகச் சென்றார்கள். முற்பகல் 11.00 மணியளவில் யாழ் முற்ற வெளியை சென்றடைந்த பேரணியுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் தொகை அலை கடலாக காட்சியளித்தது. 

அதனை தொடர்ந்து “எழுக தமிழ்” மக் கள் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வின் ஆரம்பத்தில்  போரினால் பாதிக்கப்பட்டு தனது அவயவங்களை இழந்த பொதுமகன் ஒருவர் எழுக சுடரை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி நடைபெற்று தமிழ்த் தாய் வாழ்த்து இடம்பெற்றது. 

நிகழ்வின் முக் கிய அம்சமாக “எழுக தமிழ்” பிரகடனத்தை தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான இருதய சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் பூ.லக்ஸ்மன் வெளியிட்டு வைத் தார்.

அதனை தொடர் ந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த விசேட உரையினை நிகழ்த்தியிருந்தார்.  தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றினர்.

மக்கள் பிரதிநிதிகளின் உணர்ச்சிபூர்வமான உரைகளுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர்.இறுதியில் அனைத்து மக்களினதும் ஒருமித்த உணர்ச்சிபூர்வமான எழுக தமிழ் கோசத்துடன் பேரணி நிகழ்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதேவேளை அத்தியாவசிய சேவைகள் கருதி இயங்கிய மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள் தவிர்ந்த ஏனைய வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் எழுக தமிழ் பேரணிக்கு பூரண ஆதரவைத் தெரிவித்து கதவடைப்பை மேற்கொண்டிருந்ததுடன், பல நூறு பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து பேரணிக்கு ஒருமித்த பேராதரவை வழங்கியிருந்தமை தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான இலட்சியப் பாதைக்கான ஒற்றுமையான பயணத்தினை வெளி உலகத்திற்கு உறுதியாக வெளிப்படுத் தியுள்ளது.

பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் தமது எழுச்சி முழக்கத்தில் இராணுவமே வெளியேறு, பெளத்த மயமாக்கலை உடனே நிறுத்து, காணி சுவீகரிப்பு இனியும் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விரைந்து விடுதலை செய், காணாமல்போன எம் உறவுகளுக்கு என்னவாயிற்று என பதில் சொல், நல்லாட்சி அரசாங்கமே நீயும் ஏமாற்றுகிறாயா, சுயாட்சியை வழங்கு, மீனவர்களின் கடல் வளத்தை சுரண்டாதே, சொந்த இடங்களில் எம்மை மீள்குடியமர்த்து,  உள்ளக விசாரணைகள் தேவையில்லை, சர்வதேச விசாரணையே தேவை என பல்வேறுபட்ட உரிமை கோசங்களை எழுப்பியிருந்தனர்.

மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்காக பேரணி ஏற்பாட்டுக் குழுவினரால் போக்குவரத்து ஒழுங்குகள், குடிநீர் வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையிலும் பேரணி எழுச்சிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு பேரணியில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த பெருமளவான பொலிஸார் வீதிக்கடமைகளில் ஈடுபட்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.         (செ-4-9)




THANKS   :  வலம்புரி / Valampuri

Valampuri ePaper வலம்புரி 25-SEP-2016

ஞாயிறு, 12 ஜூன், 2016

7 பேர் விடுதலை கோரி பேரணி!

7 பேர் விடுதலை கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து – கோட்டையை நோக்கிப் பேரணி!

சென்னை – ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையைக் கோரி சென்னை இராஜரத்தினம் அரங்கிலிருந்து புறப்பட்ட பேரணி பிற்பகல் 3.00 (இந்திய நேரம்) அளவில் சென்னை கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இன்று வேலூரில் இருந்து, சென்னை கோட்டை நோக்கி வாகனப் பேரணியாக நடைபெறவிருந்த இந்தப் பேரணி இறுதி நேரத்தில் காவல் துறையினரின் வேண்டுகோளுக்கிணங்க, தொடங்கும் இடம் சென்னையிலேயே இராஜரத்தினம் அரங்கம் என மாற்றப்பட்டது.
கோட்டையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பேரணியில் பல திரைப்பட இயக்குநர்களும், நட்சத்திரங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
சிறையில் வாடும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறைவாசம் அனுபவிக்கத் தொடங்கி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
பேரணி முடிவடையும்போது, பேரணியின் பிரதிநிதிகளை தமிழக அரசு சார்பில் சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், ஜெயலலிதா நேரடியாக பேரணி பிரதிநிதிகளைச் சந்திப்பாரா அல்லது அவரது அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் பெற்றுக் கொள்வார்களா என்பது இன்னும் தெரியவில்லை.

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கச்சதீவை மீட்போம் ஜெயலலிதா சூளுரை

சென்னை: 


கச்சதீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிபட தெரிவிப்பதாக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  


அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு      இடம்பெற்ற, தேர்தலில் போட்டியிடும் 14 வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜெயலலிதா  இவ்வாறு சூளுரைத்தார். அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில்;  பாக்கு நீரிணைப் பகுதியில் கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அவ்வாறு, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்து வருகிறேன். 

 ஆனால், முன்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்த கருணாநிதி, மீனவர்கள் பேராசையினால் தான் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கச் செல்கின்றனர் என்று மீனவர்களை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் என்பதை மறந்துவிடாதீர்கள்.  கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்தாலும், இலங்கை அரசு மீனவர்களின் படகுகளை திரும்பக் கொடுப்பதில்லை. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி படகுகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.  இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது தான்.  


இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.  

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது தான், 1974 ஆம் ஆண்டு இந்திய  இலங்கை உடன்பாட்டின்படி இலங்கைக்கு அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசால் கச்சதீவு தாரை வார்க்கப்பட்டது.  இதைத் தடுப்பதற்கு தேவையான எந்தவித நடவடிக்கையும் கருணாநிதி அப்போது எடுக்கவில்லை. அப்போதே இது தொடர்பாக கருணாநிதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பாரேயானால் உச்சநீதிமன்றம் மூலம் கச்சதீவு 
இலங்கைக்கு தாரை வார்த்த நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை பெற்றிருக்க முடியும். பின்னர், வாதங்களின் மூலம் நமது பாரம்பரிய உரிமையை நிலைநாட்டியிருக்க முடியும்.  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படும் நிலை எழாமலே இருந்திருக்கும். 

ஆனால், கருணாநிதி அவ்வாறு உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார்.  கச்சதீவுப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காணப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற்று மீனவர்கள் பயன் பெற வேண்டும் என்பது தான் என்னைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாடு.  


எனவே தான் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு நாட்டு மீனவர்களிடையே சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே ஆண்டு மே மாதம் கொழும்பு நகரில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் பாரம்பரிய மீன்பிடி உரிமை வலியுறுத்தப்பட்டதுடன், தமிழக மீனவர் மீதான தாக்குதல்கள் கைவிடப்பட வேண்டும் என்றும், கைது செய்யப்படும் மீனவர்கள் படகுகளுடன் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மீன்பிடி முறைகள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.  இருப்பினும் எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை. இந்த முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். அத்துடன், உச்சநீதிமன்றத்தின் மூலம் கச்சதீவு மீட்கப்பட்டு பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிலைநாட்டப்படும் என்பதை நான் உறுதிபட இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன் என்றார். - See more at: http://www.thinakkural.lk/article.php?world/fgoadwoge01367a223c6b37113712mxuer0f85df22e9377d6c4f7553makqz#sthash.hRkPyvNO.dpuf

புதன், 16 செப்டம்பர், 2015

இலங்கை போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கோரி ஐ.நா.வில் தீர்மானம்: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

http://epaper.maalaimalar.com/epaperhome.aspx?issue=1692015



இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

“இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் மனித உரிமை ஆணையர் இது தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக 1-10-2015 மற்றும் 2-10-2015 ஆகிய நாட்களில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக்கோரி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வலுவான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய அரசு உடனடியாக நடவடிகை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பட்டுள்ளார்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரை போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும், போர்க்குற்றமும், மனித குலத்துக்கு எதிரான குற்றமும் செய்யப்பட்டிருப்பதாக ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது


அங்கு இந்தக்காலப்பகுதியில் கொடூரமான வன்செயல்கள் திரும்பத் திரும்ப இடம்பெற்றிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பது, இந்த குற்றங்களை உறுதிப்படுத்துவதாகவும் ஐநா இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.
சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் உள்ளடங்கலான சர்வதேச மற்றும் உள்நாட்டு அம்சங்கள் அடங்கிய சிறப்பு கலப்பு நீதிமன்றம் இந்தக் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது.

சட்டத்துக்கு முரணான படுகொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல், சித்ரவதை, கட்டாயமாக சிறாரைப் படைக்குச் சேர்த்தல், பொதுமக்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் மீதான தாக்குதல், மனிதநேய உதவிகளை மறுத்தல், தடுத்து வைத்தலின் போதான வன்முறைகள், என இலங்கை அரசாங்கம், விடுதலைப்புலிகள், அரசோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் வன்முறைகளை வகைப்படுத்தி விளக்கியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு, ஆண்டுக்கணக்கில் இதற்கான நீதி மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளது.

இலங்கையில் இந்த வன்செயல்களுக்கு காரணமான பல கட்டமைப்புக்கள் இன்னமும் தொடருகின்ற நிலையில் அங்கு இவற்றை விசாரிப்பதற்கான உள்நாட்டு பொறிமுறைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வந்துள்ளதாக கூறியுள்ள ஐநா அறிக்கை, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஐயப்பாடும், கோபமும், நம்பிக்கையீனமும் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

உள்நாட்டுப் பொறிமுறை மூலம் இவற்றை விசாரிப்பதற்கான புதிய அரசாங்கத்தின் கரிசனை குறிப்பிடத்தக்கதாக இருந்த போதிலும், இலங்கையின் நீதித்துறை இன்னமும் இதற்கு தயாரானதாக இல்லை என்றும் ஐநா கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பின்மை, இந்த அளவு பாரிய சர்வதேச குற்றங்களை விசாரிக்கும் அளவுக்கு உள்நாட்டு நீதிக்கட்டமைப்பு போதாமை, தசாப்தகால அவசர நிலை, மோதல் மற்றும் குற்றத்துக்கு தண்டிக்கப்படாத நிலை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்புத்துறை மற்றும் நீதித்துறை சீர்கெட்டு, ஊழல் மயப்பட்டு இருப்பதும்

இவற்றை உள்நாட்டில் உரிய வகையில் விசாரிக்க முடியாமல் போனமைக்கான காரணம் என்றும் ஐநா அறிக்கை கூறுகின்றது.
கடந்த ஜனவரி முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சாதகமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷைத் ரா அத் அல் ஹுசைன் அவர்கள், ஆனால், இலங்கை, அடக்குமுறை சார்ந்த கட்டமைப்புகளையும், நிறுவன கலாச்சாரத்தையும் கலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

இலங்கை போர்க்குற்றம் குறித்த ஐநா அறிக்கை - காணொளி


இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர் அடங்கிய சர்வதேச, உள்நாட்டு கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை ஒன்று பரிந்துரைத்துள்ளது.



<iframe width="400" height="500" frameborder="0" src="http://emp.bbc.co.uk/emp/embed/smpEmbed.html?playlist=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmeta%2Fdps%2F2015%2F09%2Femp%2F150916_unlankavt.emp.xml&title=BBCTamil.com&product=news&lang=ta"></iframe>


போரில் ஈடுபட்ட அரசாங்கப் படைகள், விடுதலைப்புலிகள் மற்றும் துணை இராணுவக் குழுக்களுக்கு இந்த போர்க்குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் தொடர்பு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இவை குறித்த பிபிசியின் காணொளி.


Thanks - BBC TAMIL

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150916_unlankavt

http://www.bbc.com/tamil/
====================================================

வியாழன், 3 செப்டம்பர், 2015

இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார் இரா சம்பந்தர்

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை நாடாளுமன்றம் கூடியபோது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்தார்.

நாடாளுமன்றம் கூடியதும் இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சித் தலைவரின் நியமனம் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் வேண்டுகோள்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெற்றுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதன்படி இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர் சம்பந்தன் கடமையாற்றவுள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது இது இரண்டாடவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஏ. அமிர்த்தலிங்கம் 1977ஆம் ஆண்டு முதல் 1983 ஆண்டுவரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்கள் கிடைத்தன.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகளில் ஒன்றான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நியமிக்கப்படவேண்டுமென்று

அந்த கூட்டமைப்பின் ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த பின்னிணியில் எதிர்க்கட்சி தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.

சம்பந்தர் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.