வெள்ளி, 31 அக்டோபர், 2014

Uthayan ePaper 31OCT2014 உதயன் தூக்கு தண்டனையின் எதிரொலி! பற்றி எரியும் தமிழகம்

Maalaimalar ePaper 31OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  31-OCT-2014



  

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

 

 

============================================

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை





 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை

கொழும்பு, அக்.31-

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது
.



5 தமிழக மீனவர்கள் கைது

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவில் உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த எமர்சன் (வயது 35), அகஸ்டஸ் (35), வில்சன் (40), பிரசாத் (30), லாங்லெட் (22) ஆகிய 5 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ஹெராயின் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வந்ததாக கூறி 5 பேரையும் கைது செய்தனர். அவர்களுடன், இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு

பின்னர் அவர்கள் 8 பேரும் இலங்கையில் உள்ள வெலிக்கடை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை கொழும்பு ஐகோர்ட்டில் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

கைதான தமிழக மீனவர்கள் சார்பில் வக்கீல்கள் அனில் சில்வா, ஷராபி மொகிதீன், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். விசாரணையின் போது, இந்திய அரசு தரப்பில், தமிழக மீனவர்கள் 5 பேரும் அப்பாவிகள் என்றும், குற்றவாளிகள் அல்ல என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

தூக்கு தண்டனை

3 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோரும் மற்றும் அவர்களுடன் கைதான இலங்கை மீனவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனா தீர்ப்பு கூறினார்.


தூக்கு தண்டனையை எதிர்த்து நவம்பர் 14-ந் தேதிக்குள் அவர்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.


மீனவர்கள் கொந்தளிப்பு

இலங்கையில் தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதற்கிடையே, இந்திய அரசுக்கும் இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

இந்திய அரசு மேல்முறையீடு

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

‘‘5 இந்திய மீனவர்களுக்கு கீழமை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்ததை எதிர்த்து, கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் வக்கீல்கள் மூலம் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும்’’ என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பரூதீன் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அதேசமயம், ‘‘நமது மீனவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று நாம் கருதுவதால் இந்த பிரச்சினையை இலங்கை அரசிடமும் இந்தியா கொண்டு செல்லும்’’ என்று அவர் கூறினார். அத்துடன் இந்த பிரச்சினையை சட்டரீதியாகவும், தூதரக உறவுகள் மூலமாகவும் இந்திய அரசு கையாளும் என்றும் அவர் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஐகோர்ட்டு நவம்பர் 14-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கி இருப்பதால் அதற்குள், இந்தியாவின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

இலங்கை தூதருடன் பேச்சு

இதற்கிடையே, வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரை நேற்று தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து பேசினார். மேலும் கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரும் இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

வியாழன், 30 அக்டோபர், 2014

தமிழ் மீனவர்களுக்கு சிங்கள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு :

தமிழ் மீனவர்களுக்கு சிங்கள நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு : ராமேசுவரத்தில் தண்டவாளம் உடைப்பு, ரெயில்கள் ரத்து !



கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்திய-இலங்கை கடல் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் மற்றும் இலங்கை மீனவர் மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மா சூரசேன தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.

கடலில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி தங்கச்சிமடத்தை சேர்ந்த எமர்சன், வில்சன், அகஸ்டஸ், லாங்லேட், பிரசாத் ஆகிய ஐந்து மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி பத்மா சூரசேன குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இலங்கையை சேர்ந்த மூவருக்கும் தூக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.




தங்கச்சிமடம் மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், கொந்தளிப்பு அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஸ் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. ரெயில் தண்டவாளம் உடைப்பு காரணமாக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாட்வின் என்பவருக்கு சொந்தமான படகில் லாங்லட், பிரசாத், எமர்சன், அகஸ்டஸ், வில்சன் ஆகிய 5 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 5 மீனவர்களையும் பிடித்து, படகில் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கும், இலங்கை மீனவர்கள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் மதியம் தீர்ப்பளித்தது. இந்த தகவல் தங்கச்சிமடம் மீனவப் பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது. உடனடியாக அவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மாலை 3 மணியளவில் ராமேசுவரம் - மதுரை சாலைக்கு வந்தனர். அவர்கள் சாலையில் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் இருந்து ராமேசுவரம் சென்ற வாகனங்களும், ராமேசுவரத்தில் இருந்து மதுரை வரவேண்டிய வாகனங்களும் நடுவழியில் நின்றன.

போராட்டகாரர்களில் சிலர் ரோட்டின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர்களுக்கு தீ வைத்தனர். திடீரென சிலர் ரோட்டின் ஓரத்தில் இருந்த ராட்சத குழாய்களை உருட்டி ரோட்டின் நடுவில் போட்டு சாலையை மறித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நேரம் ஆக ஆக அந்த பகுதியில் மக்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த போராட்டத்தின்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. ஒரு தரப்பினர் ரெயில் தண்டவாளத்தை நோக்கி வந்தனர். ரெயில் தண்டவாளத்தில் டயர்களை போட்டு எரித்தனர்.

மேலும் சுத்தியல் உள்ளிட்ட கருவிகளின் உதவியால் தண்டவாளத்தை இணைக்கும் இடத்தை உடைத்து தண்டவாளத்தை பிரித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் டி.எஸ்.பி. விஜயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. இதனால் மாலை 5 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து சென்னை புறப்படவேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில், சேது எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளிட்ட 4 ரெயில்கள் ராமேசுவரத்திலேயே நிறுத்தப்பட்டன.

மேலும் ராமேசுவரத்திற்கு வந்து கொண்டிருந்த அனைத்து ரெயில்களும் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. போலீசார் தொடர்ந்து போராட்டகாரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் பாம்பனில் இருந்து ராமேசுவரம் நோக்கிச்சென்று கொண்டு இருந்த அரசு பஸ் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலைமை பற்றி அறிந்ததும், கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Maalaimalar ePaper 30-OCT-2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  30-OCT-2014



  

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

 

 

============================================

மண் சரிவு - தமிழர்கள் கதி ?? Thinakkural epaper 30-OCT-2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


மண் சரிவு - தமிழர்கள் கதி ??

http://epaper.thinakkural.lk/

Uthayan ePaper 30OCT2014 உதயன்

மலையகத்தில் நிலச்சரிவு - 400 தமிழர்கள் சாவு ?

மலையகத்தில் நிலச்சரிவு - 400 தமிழர்கள் சாவு ?

https://www.facebook.com/Sudarolinews?fref=ts

செவ்வாய், 28 அக்டோபர், 2014

தீர்வு விடயத்தில் தமிழரின் மனதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணியிருக்கின்றதா?

தீர்வு விடயத்தில் தமிழரின் மனதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணியிருக்கின்றதா?




பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட் லாந்து பிரிந்து செல்வதா அல்லது இல் லையா என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதிக அதிகாரங் களை வழங்குவதாக பிரித்தானியா உறுதி வழங்கியதையடுத்து அதிலி ருந்து பிரிந்து செல்வதை ஸ்கொட் லாந்து மக்கள் விரும்பவில்ç.

எனவே,
இவ்வாறானதொரு பொது வாக் கெடுப்பை இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசுக்குத் திராணியிருக்கின்றதா என்று நேற்று சபையில் சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன்.

நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண் டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.


அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:


“”ஜனாதிபதித் தேர்தலை நோக்க மாகக்கொண்டதாகவே இந்த வரவு-செலவுத்திட்டம் இருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கென விசேட முன்மொழிவு கள் இல்லை. வடக்கிலுள்ள தொழிற்சாலைகள் மீள்இயக்கம், தொழில் உருவாக்கம் ஆகியன பற்றியும் குறிப் பிடப்படவில்லை.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்க ளும் ஈழக் கோரிக்கையைக் கைவிட் டால் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை நீக்குவதற்குத் தான் தயார் என்று கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஈழக்கொள்கைக்கும், நிறைவேற்று முறைமைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது? புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சியை விரும்பவில்லை. இலங் கையில் வாழும் தமிழர்களுக்கு அவர் கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கெளரவமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றே அவர் கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உயர் நீதிமன் றில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ளது.


இந்த நாட்டில் சமஷ்டி போத னையை சிங்களத் தலைவர்கள்தான் முன்னெடுத்தனர். சலுகைகளை வழங்கி தமிழர்களின் உரிமைக் குரலை ஊமையாக்கி விடலாம் என்று அரசு நினைக்கக்கூடாது. தமிழர்கள் கெளரவ மானதொரு அரசியல் தீர்வை எதிர் பார்க்கின்றனர். அதை வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமாதா னம் என்பது சாத்தியப்படும்.
அதேவேளை, பெரிய பிரித்தானி யாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லவேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரி வினையை மக்கள் அங்கீகரிக்க வில்லை. எனினும், ஸ்கொட்லாந்து மக்களுக்கு வெற்றி கிடைத்தது. அதாவது, அவர்களுக்கு கூடுதல் அதிகா ரம் வழங்கப்பட்டது. இலங்கைத் தமி ழர்கள் மத்தியிலும் இவ்வாறானதொரு வாக்கெடுப்பை நடத்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?

அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய கெளரவமானதொரு தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் கள் பிரிவினைவாதத்தை விரும்ப வில்லை. இதுபற்றி அவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?” – என்றார்.

Thinakkural ePaper 28OCT2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/
தினக்குரல்தினக்குரல்

Maalaimalar ePaper 28OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  28-OCT-2014



  

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

 

 

============================================

Uthayan ePaper 27OCT2014 உதயன்

http://euthayan.com/paperviews.php?id=30954&thrus=2

திங்கள், 27 அக்டோபர், 2014

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

Maalaimalar ePaper 26-OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  26-OCT-2014



  

மேலே உள்ள 

 


மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 





   இங்கே படிக்கவும் !

 

 

============================================

====

சிறைதண்டனை - சதிகாரர்கள் யார் ??

http://epaper.thinakkural.lk/


சிறைதண்டனை -  சதிகாரர்கள் யார் ??

விழுங்கப்படும் தமிழர் நிலம்



விழுங்கப்படும் தமிழர் நிலம்

இலங்கையில் மாற்றம் வருமா ??

http://epaper.thinakkural.lk/

 இலங்கையில் மாற்றம் வருமா ??

Thinakkural ePaper 26OCT2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


தினக்குரல்

சனி, 25 அக்டோபர், 2014

வியாழன், 23 அக்டோபர், 2014

இலங்கையில் இந்து மதம் !

http://epaper.thinakkural.lk/


இலங்கையில் இந்து மதம்

Maalaimalar ePaper 23-OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  23-OCT-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

 

 

================================================

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

Maalaimalar ePaper 19-OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  19-OCT-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

Thinakkural 19OCT2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


தினக்குரல்


http://epaper.thinakkural.lk/



உற்சாக வெள்ளம் கரைபுரண்டது கொட்டும் மழையில் பூமாரி பொழிந்து ஜெயலலிதாவை வரவேற்ற தொண்டர்கள்

 பெங்களூர் சிறையில் இருந்து 22 நாட்களுக்கு பிறகு நேற்று விடுதலையான ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையம் முதல் போயஸ் கார்டன் இல்லம் வரை கொட்டும் மழையிலும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

http://epaper.dailythanthi.com/


சென்னை, அக்.19-

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக் கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ந் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன்
ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததால் கடந்த 9-ந் தேதி அவரது சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு ஜெயலலிதாவை ஜாமீனில் விடுதலை செய்தது. மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை யும் நிறுத்திவைத்த நீதிபதிகள், கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெறும் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தாமதப்படுத்தக்கூடாது என்றும், வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் டிசம்பர் 18-ந் தேதிக் குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதேபோல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினார்கள்.

விடுதலையானார் ஜெயலலிதா

ஜாமீன் நடைமுறைகள் நிறைவடையாததால் ஜெயலலிதா நேற்று முன்தினம் விடுதலை ஆகவில்லை.

ஜாமீன் நடைமுறைகள் முடிவடைந்து 22 நாட்களுக்கு பிறகு ஜெயலலிதா நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

நேற்று காலை 11 மணிக்கு தனிக்கோர்ட்டு கூடியதும், நீதிபதி மைக்கேல் டி.குன்கா இருக்கையில் வந்து அமர்ந்தார். அப்போது ஜெயலலிதா தரப்பில் குமார், அசோகன், மணிசங்கர், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட வக்கீல்கள் ஆஜராகி, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியும், தண்டனையை நிறுத்திவைத்தும் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் நகலை தாக்கல் செய்தனர். அதை நீதிபதி மைக்கேல் டி.குன்கா படித்து பார்த்தார்.

நீதிபதி குன்கா உத்தரவு

பின்னர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ஜெயலலிதாவுக்கு பரத், குணஜோதி ஆகியோர் தலா ரூ.1 கோடிக்கான சொத்து பத்திரங்களை உத்தரவாதமாக தாக்கல் செய்தனர். இதேபோல் மற்ற 3 பேருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அவற்றை பரிசீலித்த நீதிபதி மைக்கேல் டி.குன்கா, ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

“தனிக்கோர்ட்டு வழங்கிய தண்டனையை நிறுத்திவைத்து, ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஒரு குற்றவாளிக்கு2 பேர் வீதம் 8 தனி நபர்கள் தலா ரூ.1 கோடி வீதம் ரூ.8 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை உத்தரவாதமாக வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவில் கூறி உள்ளது. உத்தரவாதத்துக் கான சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. எனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று ஜெயலலிதா உள்பட 4 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடுகிறேன். மேலும் இந்த கோர்ட்டு விதிமுறைப்படி கோர்ட்டு ஊழியர் ஒருவர் உத்தரவை எடுத்துச்சென்று, சிறை கண்காணிப்பாளரிடம் நேரடியாக வழங்கும்படி உத்தரவிடுகிறேன்.”

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்தார்

இந்த நடைமுறைகள் அனைத்தும் மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதியின் உத்தரவு ‘டைப்’ செய்யப்பட்டு, அதில் பிற்பகல் 2 மணிக்கு சிட்டி சிவில் கோர்ட்டு பதிவாளர் சந்திரசேகர மருகூர், நீதிபதி மைக்கேல் டி.குன்கா ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பிவைத்தனர். அந்த உத்தரவை கோர்ட்டு ஊழியர் வெங்கடேஷ் போலீஸ் வாகனத்தில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு எடுத்துச் சென்றார். அவருடன் அ.தி.மு.க. வக்கீல் ஒருவரும் சென்றார்.

நீதிபதியின் உத்தரவை பிற்பகல் 2.45 மணிக்கு சிறை கண்காணிப்பு அதிகாரியிடம் கோர்ட்டு ஊழியர் வெங்கடேஷ் வழங்கினார். அதன்பிறகு ஜெயலலிதாவிடம் கையெழுத்து வாங்குவது உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்தது.

இதைத்தொடர்ந்து, பிற்பகல் 3.15 மணிக்கு ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலை ஆகி வெளியே வந்தார். 3.20 மணிக்கு அவர் சிறை வளாகத்தில் இருந்து காரில் பெங்களூர் எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு புறப்பட்டார். இதேபோல் விடுதலையான சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் வெளியே வந்தனர்.

உற்சாக வரவேற்பு


கறுப்பு பூனை பாதுகாப்பு படையினர் புடை சூழ ஜெயலலிதாவின் கார் விமான நிலையம் நோக்கி விரைந்தது. புன்னகையுடன் காணப்பட்ட ஜெயலலிதா எப்போதும் போல் உற்சாகமாக இருந்தார். அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் காரில் இருந்தனர். மற்றொரு காரில் சுதாகரன் சென்றார்.

ஜெயலலிதாவின் காரை பின்தொடர்ந்து பாதுகாப்பு படை வாகனங்கள், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரது கார்கள் அணிவகுத்து சென்றன.

ஜெயலலிதாவை வரவேற்க பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அருகே இருந்து எச்.ஏ.எல். விமான நிலையம் வரை ஆங்காங்கே சாலையின் இருபுறமும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

அவர்கள் கட்சி கொடியை அசைத்தும், ஜெயலலிதாவின் உருவப்படங்களை ஏந்தியும் ‘அம்மா வாழ்க!’ ‘புரட்சித்தலைவி வாழ்க!’ ‘தங்கத்தலைவி வாழ்க!’ என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

அவர்களை பார்த்து ஜெயலலிதா கை கூப்பி வணங்கியபடி சென்றார். விமான நிலைய ரோட்டில் சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயலலிதாவின் கார் மீது மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர். அப்போது லேசாக மழை தூறிய போதிலும், அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களை நோக்கி ஜெயலலிதா கை அசைத்தபடியும், கைகூப்பி வணங்கியபடியும் சென்றார்.

ஜெயலலிதாவின் விடுதலையை தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

சென்னை வந்தார்


பிற்பகல் 3.20 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா, 3.55 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து 4.20 மணிக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா சென்னை புறப்பட்டார். அதே விமானத்தில் சசிகலா, இளவரசி ஆகியோரும் வந்தனர்.

ஜெயலலிதாவை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, மந்திரிகள் நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வழியனுப்பிவைத்தனர்.

ஜெயலலிதா வந்த தனி விமானம் மாலை 4.50 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது.

விமான நிலையத்தில் ஜெயலலிதாவை அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், தே.மு. தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க் கள் மா.பா.பாண்டியராஜன், அருண்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கொட்டும் மழையில் உற்சாக வெள்ளம்


வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா அங்கிருந்து காரில் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டார். காரின் முன் இருக்கையில் அவர் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

ஜெயலலிதாவின் காரை தொடர்ந்து ஏராளமான கார்கள் அணிவகுத்து சென்றன.

ஜெயலலிதாவின் வருகையை எதிர்பார்த்து சென்னை விமான நிலையத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். ஜெயலலிதாவின் கார் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் துள்ளிக்குதித்து ஆரவாரமிட்டனர்.

ஜெயலலிதாவின் வாகனத்தின் மீது பூக்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையோரம் திரண்டு இருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெயலலிதா புன்னகையுடன் இரு விரல்களை காட்டியபடி தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி சென்றார்.

தொண்டர்களின் அன்பு மழையில் நனைந்தபடி ஜெயலலிதா மாலை 6.02 மணிக்கு போயஸ் கார்டன் இல்லம் வந்தடைந்தார். அங்கும் ஏராளமாக தொண்டர்கள் திரண்டு இருந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

சனி, 18 அக்டோபர், 2014

பெங்களூரு சிறையிலிருந்து ஜெயலலிதா விடுதலை: சென்னை வந்தடைந்தார்


ஜாமினில் விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதாவின் விடுதலையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழந்தனர்.

விடுதலையான ஜெயலலிதா சிறை வளாகத்தில் இருந்து நேராக பெங்களூர் ஹெச்.ஏ.எல் விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம்  சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராள தொண்டர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் குவிந்தனர்.

ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.  ஜெயலலிதாவை வரவேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் பரப்பன அக்ரகார சிறைவளாகத்தில் முகாமிட்டிருந்தனர்.

ஜெயலலிதாவை வரவேற்க அவரது சென்னை போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் குவிந்துள்ளனர்


லைவ்
http://www.puthiyathalaimurai.tv/

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் !



தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

Tamil Nesan ePaper 18OCT2014 தமிழ் நேசன்

https://www.facebook.com/tamilnesan1924?fref=ts
தமிழ் நேசன்

Thinakkural ePaper 18OCT2014 தினக்குரல்

http://epaper.thinakkural.lk/


தினக்குரல்

http://epaper.thinakkural.lk/

http://epaper.thinakkural.lk/

Maalaimalar ePaper 18-OCT2014 மாலைமலர்

மாலைமலர் - இன்றைய  இ-பேப்பர்  18-OCT-2014



  

மேலே உள்ள 

 

மாலை மலர் பக்கத்தை பார்க்கவும் !

 

அல்லது 



   இங்கே படிக்கவும் !

ஜாமீனுக்குப் பிறகு ஜெயலலிதா என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான ஜெயலலிதா என்னவெல்லாம் செய்யலாம் அல்லது செய்ய முடியாது என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்களிடம் விசாரித்த போது அவர்கள் கூறிய தகவல் வருமாறு:–

தற்போது தண்டனை மீதான இடைக்காலத் தடை மற்றும் ஜாமீன் பெற்ற நிலையில் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராகவோ முதல்–அமைச்சராகவோ ஆகமுடியாது.

ஆனால் அவருடைய ஜாமீன் குறித்து எந்த நிபந்தனையையும் நீதிமன்றம் விதிக்காததால், அவரால் முழுமையாக கட்சிப்பணியாற்ற முடியும்.

தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியும். கட்சி கூட்டங்களை தலைமையேற்று நடத்த முடியும்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவருடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாகவும் பொறுப்புகளில் உள்ளதாலும் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களையும் அழைத்து கட்சித்தலைவர் என்ற முறையில் ஆலோசனைகள் நடத்த எந்தத் தடையும் இல்லை.

ஆனால் அரசாங்க விஷயத்தில் எந்தவிதமான பணிகளையும் மேற்கொள்ள முடியாது. எந்த வகையான அதிகாரத்தையும் செலுத்த முடியாது.


மேலும் சுப்ரீம் கோர்ட்டு எந்த வகையான நிபந்தனையும் விதிக்காததால் பெரிய அரசியல் கட்சி ஒன்றின் தலைவி என்ற முறையில் தமிழக மக்களின் நலனுக்காக அல்லது ஏதாவது ஒருநலத்திட்டம் தொடர்பாகவோ நிதி ஒதுக்கீடு தொடர்பாகவோ ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் அல்லது மத்திய அமைச்சர்களையோ சந்திக்க எந்தவகையான தடையும் இல்லை.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கட்சித்தலைவி என்ற முறையில் கட்சித் தலைமையகத்தில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்த முடியும்.

கட்சித்தலைவி என்ற முறையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள ஆணையங்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளவும் எந்தவகையான தடையும் இல்லை.