தினகரன் / Dinakaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினகரன் / Dinakaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள குர்ஷித் இலங்கை செல்கிறார்.



காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள

குர்ஷித் இலங்கை செல்கிறார் : மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையில் இந்திய குழுவினர் கலந்து கொள்கிறார்கள். மத்திய அரசு நேற்று இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரிட்டனின் காலனியாக இருந்து சுதந்திரம் அடைந்த 53 நாடுகள் காமன்வெல்த் நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 1971ம் ஆண்டு முதல் காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 23வது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் வருகிற 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மற்றும் தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், சிறைபிடிப்பு ஆகிய சம்பவங்களை காரணம் காட்டி மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என தமிழக கட்சிகள் கூறி வருகின்றன. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

தமிழகத்தை சேர்ந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட காங்கிரஸ் அமைச்சர்களும் பிரதமர் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனினும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை, பிரதமரை வலியுறுத்தி வந் தது. இந்நிலையில், இலங்கை மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான இந்திய குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசு தரப் பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை செயலர்  கூறுகையில், காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழுவினர் கலந்து கொள்வார்கள்’ என்று அறிவித்தார்.

எனினும், காமன்வெல்த் மாநாட்டு தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வாரா என்பது குறித்து  இன்னும் முடிவெடுக்கவில்லை. மாநாட்டில் பங்கேற்க குர்ஷித்தை அனுப்பு வது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் இன்று கடிதம் அனுப்புவார் என தெரிகிறது. கடந்த 1993ம் ஆண்டு முதல் நடைபெற்ற 10 காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் 5 முறை மட்டுமே பிரதமர் கலந்து கொண்டுள்ளார். 4 மாநாட்டில் அமைச்சர்கள் தலைமையிலும், ஒரு மாநாட்டில் துணை ஜனாதிபதி தலைமையிலும் இந்திய குழுவினர் கலந்து கொண்டுள்ளனர் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று மத்திய அரசு நேற்று இரவு வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 15 செப்டம்பர், 2012

104-வது பிறந்த நாள் விழா: அண்ணா சிலைக்கு ஜெயலலிதா மரியாதை




சென்னை, செப். 15-




பேரறிஞர் அண்ணாவின் 104-வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவச்சிலை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. காலை 10.45 மணிக்கு அண்ணா சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல் - அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.




(  நன்றி  :  தினகரன் )

 ``````

கருணாநிதி மலர் தூவி:  வள்ளுவர் கோட்டத்தில்  அண்ணா படத்திற்கு கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார்.

-------------------------------------------------------------------------------------------------

சனி, 1 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்த எல்லா மனுக்களும் தள்ளுபடி




கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க  தடை கேட்டு தொடரப்பட்ட எல்லா மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.  ‘மக்களின் நலன் கருதி அரசு எடுத்த முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ஐகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்திக்கான எரிபொருள் நிரப்பும் பணிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தொடங்கின.


( தினகரன் 01-Sep-2012)

-------------------------------------------------

ஞாயிறு, 22 ஜூலை, 2012

காவிரி நதி நீர் - கர்நாடக மறுப்பு ! தமிழக அரசு - டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு




காவிரி நதி நீர் - கர்நாடக மறுப்பு !
தமிழக அரசு - டெல்லி உச்ச நீதி மன்றத்தில் மனு!



 தினகரன் :

 தமிழகத்துக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதற்காக பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையத்தை உடனே கூட்ட உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 


மாவட்டங்களில் ஒரு பக்கம் பாசனத்துக்கு கைகொடுக்கும் வகையில் போதிய மழை இல்லை. இன்னொரு பக்கம், வழக்கம் போல, காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகா முரண்டு செய்கிறது. இதனால், மேட்டூரில் தண்ணீர் இல்லாத நிலை தொடர்கிறது. விளைவு, விவசாயம் பாதிக்கப்பட்டு, வறட்சி தாண்டவமாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவை கேட்டும் பலனில்லை; கர்நாடகாவை உத்தரவிட வேண்டிய காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டச்சொன்னாலும் மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை. இதனால் வேறு வழியின்றி, சுப்ரீம் கோர்ட்டை தமிழக  அரசு நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தரவில்லை. கடந்த 2002ல் காவிரி நதி நீர் ஆணையம், வறட்சி காலத்தில் எந்த அளவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற வரன்முறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், அந்த விதிமுறைகளை கர்நாடக அரசு முற்றிலுமாக கடைபிடிக்கவில்லை.

இதே நிலைதான் இந்த ஆண்டும் தொடர்ந்து நீடித்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் தமிழகத்தில் உள்ள காவிரி பாசன விவசாயப் பகுதிகள் கடும் வறட்சியில் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த ஜூன் மாதம் தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தராததால் தமிழகத்தில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே, காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்டுமாறு பிரதமருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், தலைக் காவிரியிலிருந்து வரும் தண்ணீரை கர்நாடக அரசு பல்வேறு தடுப்பணைகளைக் கட்டி தேக்கி வருகிறது. இதனால், தமிழகத்துக்கு வரும் தண்ணீர் தடைபடுகிறது. அந்த தடுப்பணைகளில் தண்ணீர் அதிக அளவு தேக்கப்படாமலிருந்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, கர்நாடக அரசு தடுப்பணைகளில் தண்ணீரைத் தேக்கிவைக்கக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்னும் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

செவ்வாய், 17 ஜூலை, 2012

துணை ஜனாதிபதி தேர்தல்: அன்சாரி vs ஜஸ்வந்த் சிங்




துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான  ஜஸ்வந்த் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஹமீது அன்சாரியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்.

 துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி அன்சாரி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். எம்.பி.க்கள் மட்டுமே  வாக்களிக்கும் இந்த தேர்தலில் அன்சாரிக்கு அதிக ஆதரவு உள்ளது.

வியாழன், 5 ஜூலை, 2012

இலங்கை விமானப்படை வீரர்களை திருப்பி அனுப்ப முதல்வர் ஜெயலலிதா / வைகோ வலியுறுத்தல்

-----------------------------------------------------




 மாலை மலர் 




--------------------------------------------------------

தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒன்பது விமானப்படை வீரர்கள் பயிற்சி பெற வந்து இருக்கிறார்கள் என்ற செய்தி தமிழர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார்.


Thanks :  மாலைச்சுடர்

------------------------------------------------------------------------------------------

  Thinaboomi :


-----------------------
தமிழகத்திற்கு தொழில்நுட்ப பயிற்சி பெற வந்துள்ள இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமான படை வீரர்களுக்கு, மத்திய அரசு தொழில்நுட்ப பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பது போன்ற செயலாக இருப்பதாக, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக இலங்கை விமானப்படை வீரர்களை, மத்திய அரசு திரும்ப அனுப்ப வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.


----------------------------------------------------

சனி, 30 ஜூன், 2012

தமிழகத் துக்கு பல புதிய ரயில்கள் ! ?



ரயில்வே பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் மக்களவையில் தாக்கலானது. அதில் தமிழகத் துக்கு பல புதிய ரயில்கள் அறிவிக் கப்பட்டன. அந்த புதிய ரயில்களுக் கான கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டது.


 * சென்னை சென்ட் ரல் , பெங்களூர் ஏசி இரண் டடுக்கு ரயில்(டபுள் டெக்கர்)


மேலும் படிக்க -  தினகரன் 

வியாழன், 28 ஜூன், 2012

யாழ்ப்பாணம் உள்பட இலங்கை தமிழர் பகுதியில் மக்கள் தொகை குறைந்தது..

இலங்கையில் யாழ்ப்பாணம் உள்பட தமிழர்கள் வாழும் பகுதிகளில் மக்கள் தொகை 20 சதவீதம் குறைந்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் கடந்த 1981ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27ம் தேதியில் இருந்து மார்ச் 21ம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. இதில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 சதவீதம் தமிழர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

 கடந்த 1981ம் ஆண்டு 7 லட்சத்து 34 ஆயிரத்து 474 தமிழர்கள், யாழ்ப்பாணத்தில் வசித்துள்ளனர். சமீபத்தில் ( 2012 )எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 83 ஆயிரத்து 17 ஆக குறைந்துள்ளது.

இலங்கை போரில் பெரும் பாதிப்புக்கு உள்ளான முல்லை தீவில் 92,228, மன்னார் பகுதியில் 99 ஆயிரத்து 63 பேர் வசிக்கின்றனர். எனினும் இலங்கையின் மொத்த மக்கள் தொகை  ஒரு கோடியே 40 லட்சத்தில் இருந்து, 2 கோடியே 27 லட்சமாக உயர்ந்துள்ளது.

 --------------

தினகரன் News

------------------------------------


Population plunge in Sri Lanka's Tamil base


Thanks : (AFP)

COLOMBO — Sri Lanka's first national census in 30 years has shown a dramatic 20 percent drop in the population of the Jaffna peninsula, the long-time base of Tamil rebels during the island's ethnic conflict.

According to a preliminary census report released Wednesday, the population in Jaffna, which the rebels once ran as a de facto separate state in the northeast, had fallen from 734,000 in 1981 to 583,000.


The report offered no analysis, but a Tamil legislator in the national parliament said it reflected an exodus during the fighting between Tamil rebels and government forces from 1972 to 2011 that claimed an estimated 100,000 lives.

"Our estimate is that out of the one million Tamils who fled the fighting and are living abroad, at least 80 percent were from Jaffna," said Suresh Premachandran.

"If not for the war, the population in Jaffna would have been over 1.4 million," he added.


One likely consequence of the new census figures will be a reduction in ethnic Tamil minority representation in the national parliament, which is dominated by members of the Sinhalese majority.

Seats in the 225-member parliament are allocated on the basis of a region's population. Nine seats are currently allocated for Jaffna, but Premachandran said that would now drop to six.


--------------------------------------------------------------------------------

திங்கள், 2 ஜனவரி, 2012

பொங்கல் மிகை ஊதியம் Pongal Bonus for TN Govt Staff

பொங்கல் மிகை ஊதியம்  ( Pongal Bonus )


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் குறித்த அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா ( 01-Jan-2012 ) வெளியிட்டுள்ளார். அதில் சி.மற்றும் டி.பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு 30-நாள் ஊதியத்திற்கு இணையாக 3-ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ஏ.மற்றும் பி. பிரிவு அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கவும்;, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவரகள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு 500-ரூபாயாக பொங்கல் பரிசு வழங்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




இதேபோன்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொகுப்பு ஊதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

வெள்ளி, 30 டிசம்பர், 2011

Cyclone Thane ’தானே’ புயல் புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடந்தது.

’தானே’ புயல் புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடந்தது.




புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
தானே புயல் கரையைக் கடந்த போது புதுச்சேரி மாநிலத்திலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல
இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. பண்ரூட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில்
500 கி.மீ., தூரத்துக்கு கடல்நீர் உள்ளே புகுந்துள்ளது.

மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொலை தொடர்பு
முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின் கம்பங்கள், தொலைத்
தொடர்பு கம்பங்கள், சாய்ந்தன இதனா மின்சாரம் துண்டிக்கபட்டு உள்ளது. பெரிய மரங்கள் சாலைகள் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டு உள்ளது.  

----

தினகரன் / Dinakaran

 அடுத்த 12மணி நேரத்துக்கு கனமழை தொடரும்!
-- ------------------------------------------------------------------------



--------------------------------------------------------------------------------

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

Non-Resident Visitation to Top Local Sites in India : comScore

ஒரு இணையதளத்தை எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று துல்லியமாக கணக்கிடும் COMSCORE என்ற நிறுவனம் (Internet Marketing Research Company) வெளியிட்ட பட்டியலில், முதல் 20 இடத்தில் (தினகரன்) Dinakaran.com இணையதளம் இடம் பிடித்துள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர்களால் அதிகம் பார்க்ப்படும் இந்திய இணையதளங்களை பட்டியலிட்டு. COMSCORE என்ற மிகப்பெரிய நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் முதல் 20 இடங்களில் (தினகரன்) Dinakaran.com இணையதளமும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி முதல் 20 இடங்களில் இடம்பிடித்த ஒரே தமிழ் இணையதளம் (தினகரன்) Dinakaran.com என்ற பெருமையும் பெற்றுள்ளது.


வெளிநாடு வாழ் இந்தியர்கள், சங்கங்கள் செய்திகள் மற்றும் படங்களை அனுப்ப தொடர்பு கொள்ளுங்கள்... Email : dotcom@dinakaran.com

- - 

Also read 

செவ்வாய், 6 டிசம்பர், 2011

தமிழக எல்லையில் பதற்றம்






Dinakaran

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழக& கேரள எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. ( Dinakaran )
----

மக்கள் ஓசை

------

சனி, 21 மே, 2011

செய்தி : கனிமொழி கைது

21-May-2011


இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ( 2G ) ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. இந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு சுமார் 1,76,000 கோடிகள் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக முதல் குற்றப்பத்திரிக்கையை, இது குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ, முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசவைக் கைது செய்து இருந்தது.
இந்நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த சிபிஐ, அதில் நாடாளுமன்ற உறுப்பினரும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் பெயரை சேர்த்து இருந்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக கனிமொழி கைது செய்யப்படக்கூடும் என்ற கருத்து நிலவி வந்தது. கனிமொழி சார்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி, கனிமொழி பெண் என்பதாலும், ஒரு குழைந்தைக்கு தாய் என்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார். இது குறித்த தீர்ப்பை கடந்த 14 தேதிக்கு ஒத்திவைத்திருந்த நீதிபதி, பின்னர் விசாரணையை 20 தேதிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் கண்மொழியின் ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த வழக்கில் ஏற்கனவே மத்திய அமைச்சர் ஆ.ராசா, யுநிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி நிறுவனத்தைச் சேர்ந்த பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சதியில் கனிமொழிக்கு முக்கியப் பங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவரை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும் அல்லது அழிக்கக்கூடும் என்று தெரிவித்தார். மேலும் கனிமொழியை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் கனிமொழி நேற்று மாலை (20 மே) சிபிஐ ஆல் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

-----

இதனை சில தமிழ் பத்திரிகைகள் வெளியிட்டது முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டது , ஆனால் தினகரன்   திரு. " மம்தா "  அவர்கள் மேற்கு வங்க முதல்வராக பதவி  ஏற்ற செய்தியினை முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தது !

1) தினத்தந்தி ( தமிழ்நாடு )




2) தினமணி ( தமிழ்நாடு )




3) மக்கள் ஓசை ( மலேசியா )



4) தினகரன்  ( தமிழ்நாடு )

5) வீரகேசரி ( இலங்கை )



---

சனி, 14 மே, 2011

செய்தி : அ.தி.மு.க அமோக வெற்றி


2011 தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தலில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பாண்மைப் பலத்தைப் பெற்று அமோக வெற்றியை ஈட்டியுள்ளது.

முதல் பக்கத்தில் செய்தி :

 1) உதயன் ( யாழ்ப்பாணம் )  14 மே





2) மக்களோசை ( மலேசியா )



3)  தினத்தந்தி ( தமிழ்நாடு )



4) தினமணி ( தமிழ்நாடு )


5) தினகரன்  ( தமிழ்நாடு )


6) மாலைமலர்  ( தமிழ்நாடு )  13 மே



7) வீரகேசரி ( இலங்கை )


--