திங்கள், 2 ஜனவரி, 2012

பொங்கல் மிகை ஊதியம் Pongal Bonus for TN Govt Staff

பொங்கல் மிகை ஊதியம்  ( Pongal Bonus )


அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு மிகை ஊதியம் வழங்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.










தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் குறித்த அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா ( 01-Jan-2012 ) வெளியிட்டுள்ளார். அதில் சி.மற்றும் டி.பிரிவைச் சேர்ந்த அலுவலர்களுக்கு 30-நாள் ஊதியத்திற்கு இணையாக 3-ஆயிரம் ரூபாய் உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.




மேலும் ஏ.மற்றும் பி. பிரிவு அலுவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கவும்;, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவரகள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு 500-ரூபாயாக பொங்கல் பரிசு வழங்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.




இதேபோன்று சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொகுப்பு ஊதியம் பெறும் பணியாளர்கள், பகுதி நேர ஊழியர்களுக்கும் சிறப்பு மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை: