செவ்வாய், 30 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா 1,51,215வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா 1,51,215வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததற்கு ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்கள் மற்றும் தோழமை கட்சியினருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். வாக்காளப் பெருமக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பாடுபடுவேன் என ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.


மேலும் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அடுத்து அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இன்று மாலை சபாநாயகர் முன்னிலையில் எம்.எல்ஏ.வாக பதவி ஏற்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். 

சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி 2,939 வாக்குகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தார்.

கருத்துகள் இல்லை: