வெள்ளி, 30 டிசம்பர், 2011

Cyclone Thane ’தானே’ புயல் புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடந்தது.

’தானே’ புயல் புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடந்தது.




புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 125 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.
தானே புயல் கரையைக் கடந்த போது புதுச்சேரி மாநிலத்திலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல
இடங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தன. பண்ரூட்டி, புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில்
500 கி.மீ., தூரத்துக்கு கடல்நீர் உள்ளே புகுந்துள்ளது.

மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மதுரை, ராமேஸ்வரம் ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தில் தொலை தொடர்பு
முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே புயல் கரையைக் கடந்த போதிலும், பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின் கம்பங்கள், தொலைத்
தொடர்பு கம்பங்கள், சாய்ந்தன இதனா மின்சாரம் துண்டிக்கபட்டு உள்ளது. பெரிய மரங்கள் சாலைகள் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கபட்டு உள்ளது.  

----

தினகரன் / Dinakaran

 அடுத்த 12மணி நேரத்துக்கு கனமழை தொடரும்!
-- ------------------------------------------------------------------------



--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை: