செவ்வாய், 10 டிசம்பர், 2013

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் - சீமாந்திரா பகுதி காங்கிரஸ் எம்.பி.க்கள்



http://epaper.dinamani.com/196332/Dinamani-Chennai/10-12-2013#page/1/1

தெலங்கானா விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

தனி தெலங்கானா மாநிலம் அமைக்க அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ஆந்திராவை சேர்ந்த மத்திய அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், ஆந்திராவை பிரிக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஆந்திர மாநிலம் சீமாந்திரா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் சபாநாயகர் மீராகுமாரிடம் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ள சம்பவம் அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: