புதன், 15 ஜூன், 2016

2016 CM Jaya Meets PM ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு

ஜெயலலிதா மோடியிடம் அளித்த மனு: 94 பக்கங்கள்! 29 அம்சங்கள்! முக்கியமானவை என்ன?




நேற்று நடைபெற்ற ஜெயலலிதா-நரேந்திர மோடி சந்திப்பின் போது,ஜெயலலிதா 94 பக்கங்களைக் கொண்ட, 29 அம்சங்கள் அடங்கிய கோரிக்கைகளைச் சமர்ப்பித்தார்.



அந்த மனுவின் முக்கிய அம்சங்களில் சில பின்வருமாறு:
  • முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்.
  • காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
  • கச்சத் தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தடைவிதிக்க வேண்டும்.
  • தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.
  • நதிநீர் இணைப்பு செயல்படுத்தப்பட வேண்டும்
  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  • இலங்கை சிறையில் உள்ள 21 மீனவர்கள் மற்றும் அவர்களின் 92 படகுகளை விடுவிக்க வேண்டும்.
  • கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோவில் மறு சீரமைப்பை தமிழக மீனவர்களின் ஒப்புதலுடன் நடத்த வேண்டும்.
  • கூடங்குளம் அணுமின் நிலைய இரண்டாவது கட்ட பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
  • தமிழை நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
  • மெட்ரோ இரயில் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும் – முழுமைப்படுத்தப்பட வேண்டும்.
  • பறக்கும் ரயில் – மோனோ இரயில் – சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்க வேண்டும்.
  •  ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்சேவை வரி மீதான மசோதா திருத்தம் செய்யப்பட்டால் ஆதரவு.
  •  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது
  •  அரசு நடத்தும் தொலைக்காட்சி இணைப்பு (கேபிள்) சேவைக்கு டிஜிட்டல் எனப்படும் இலக்கவியல் உரிமம் அளிக்கப்பட வேண்டும்.
  • கெயில் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும்.
  • தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும்.
  • மற்ற சில அம்சங்கள் வெள்ள நிவாரணம், தமிழகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கைகளாகும்.


பிரதமருடனான தனது சந்திப்பை முடித்துக் கொண்ட ஜெயலலிதா, அதன் பின்னர் மத்திய இணை அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.இராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்தார்.
தனது சந்திப்புகளை முடித்துக் கொண்டு நேற்றிரவே ஜெயலலிதா சென்னைக்கு தனி விமானம் மூலம் திரும்பினார்.



Thanks : Selliyal   ( http://www.selliyal.com/archives/131545 )


கருத்துகள் இல்லை: