வெள்ளி, 22 ஜூன், 2012

படகு கவிழ்ந்து 75 தமிழர்கள் சாவு





இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 200 பேருடன் ஆஸ்திரேலியா சென்ற படகொன்று இந்தோனேஷி யாவின் கடற்கரைப் பிராந்தியத்துக்கு அப்பாலுள்ள கிறிஸ்மஸ்தீவின் வடக்கே கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது அந்தப் படகில் பயணித்த இலங்கையர்களில் 75 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் அனேகமாக எல்லோரும் தமிழர்களே என ஆஸ்திரேலிய அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  படகிலிருந்த 40 பேர் ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷியக் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஏனையோரின் கதி என்னவென்று தெரியவில்லை. 




---------------------------------------------------

கருத்துகள் இல்லை: