புதன், 3 டிசம்பர், 2014

'எல்லைகள் திரும்பவும் வகுக்க முடியாது' பாகிஸ்தானுக்கு அருண் ஜெட்லி திட்டவட்டம் !

இந்தியாவுடனான எல்லையை திரும்பவும் வகுக்க முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிய மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

1990-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று லாகூர் பஸ் போக்குவரத்தை குறிப்பிட்டு பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, இந்தியா, பாகிஸ்தானுடனான நட்புறவை விரிவடைய செய்தது. என்றார். "நமது அண்டைய நாடு, அவர்கள் பயன்படுத்தும் அர்த்தத்தினை புரிந்துக் கொள்ள வேண்டும், அவர்கள் இந்த நாட்டில் எந்தஒரு பகுதியையும் இனிபெற முடியாது. நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் மாற்றிக் கொண்ட காலம் மாறிவிட்டது. எல்லைகள் திரும்பவும் வகுக்க முடியாது. ஏற்கனவே உள்ளபடியே எல்லைகள் இருக்கும்."

"ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி என்பதை நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்."
என்று பாரதீய ஜனதா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அருண் ஜெட்லி கூறினார்.

இந்தியாவில் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது, நட்புறவுக்கு முயற்சிகளை மேற்கொண்டார், லாகூருக்கு பஸ்சில் சென்றார். பாகிஸ்தானுக்கு நட்பு கரத்தை விரிவடைய செய்தார். பாகிஸ்தானில் அவர் பேசுகையில், வரலாறு வேண்டுமெனால் மாறலாம், ஆனால் புவியியலை மாற்ற முடியாதது. அண்டை நாடுகள் எப்போதுமே அண்டைய நாடாகவே இருக்கும். அந்த நாடுகள் இடையிலான உறவுகள் நல்லது அல்லது மோசமானது என்பதை மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் பாகிஸ்தானிடம் இருந்தும் இதுபோன்ற பதில்வரும் என்று நாங்கள் நம்புகிறோம். என்று அருண் ஜெட்லி வாஜ்பாயின் பேச்சை குறிப்பிட்டு பேசினார்.

தீவிரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாத அருண் ஜெட்லி, இந்தியா அதை சமாளிக்க திறனை பலப்படுத்தியுள்ளது. உலக மக்கள் தொகையில் 6-ல் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இந்தியா ராணுவம் மற்றும் பொருளாதார வலிமையை கொண்டுள்ளது, தீவிரவாதம், ஊடுருவல் மற்றும் வன்முறையை மாற்றம் கொண்டு வருவதற்கு பயன்படுத்த முடியாது. என்று அருண் ஜெட்லி கூறினார்.

கருத்துகள் இல்லை: