புதன், 3 டிசம்பர், 2014

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க வேண்டும்: வைகோ



முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க வேண்டும்: வைகோ
 
 
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 
 
 
கடந்த 2 நாட்களாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை கண்காணிக்கும் கடமையைச் செய்ய தமிழக அதிகாரிகள் சென்றபோது அணைக்கு செல்ல விடாமல் கேரள வனத்துறை அதிகாரிகள் தடுத்து விட்டனர். ஏற்கனவே அணைப்பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக அதிகாரிகளுக்கு உணவு கொண்டு செல்லவும் அனுமதிக்கவில்லை.

அணை கட்டப்பட்ட நாளில் இருந்து 1968-ம் ஆண்டு வரை முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு தமிழக காவல்துறையின் வசமே இருந்தது. அதன் பின்னர் கேரள அரசின் போலீஸ் வசம் தமிழகம் தானாக ஒப்படைத்தது. முல்லைப்பெரியாறு அணைக்கு சேதம் ஏற்படுத்த கேரளத்தின் சில சக்திகள் முயன்று வருகின்றன.

எனவே முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு பொறுப்பை தமிழக காவல்துறை வசமே ஒப்படைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக ஏற்பாடாக அணையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் வசம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: