வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மகாராஸ்டிர மாநிலம் புனேயில் தொடர் குண்டு வெடிப்பு – பாரிய சேதங்கள் இல்லை

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் இன்று இரவு 4 இடங்களில் அடுத்தடுத்து குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 2 பேர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை.

மக்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதிகளில் இந்த குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளனர். மக்களை பீதிக்குள்ளாக்கும் நோக்கிலேயே இந்த வெடிகுண்டுச் சம்பவத்தை தீவிரவாதிகள் நிகழ்த்தியுள்ளதாக கருதப்படுகிறது.


சம்பவ இடத்திற்கு டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தேசிய புலனாய்வு ஏஜென்சியின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடங்களை முற்றுகையிட்டு தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

வெடிகுண்டுச் சம்பவங்கள் குறித்து புனே போலீஸ் கமிஷனர் குலப் ராவ் பாட்டீல் கூறுகையில், இதுதீவிரவாத சம்பவம் போலத் தெரியவில்லை. உள்ளூர் விஷமிகள்தான் பீதியை ஏற்படுத்துவதற்காக இதைச் செய்துள்ளதாக சந்தேகிக்கிறோம். எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. குப்பைத் தொட்டியிலும், சைக்கிள் கேரியரிலும் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன என அவர் தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------------------
                              தினத்தந்தி ( Mumbai Edition )


--------------------------------------------

கருத்துகள் இல்லை: