ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்.

நிபந்தனை அடிப்படையில் டெசோ மாநாடு நடத்த அனுமதி: உயர்நீதிமன்றம்




சென்னை, ஆக.12:


டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.




சென்னை ராயப்பேட்டை மைதானத்தில், நிபந்தனையின் அடிப்படையில் மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நிபந்தனைகளை காவல்துறை மாநாட்டு அமைப்பாளர்களிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.



இதை அடுத்து, மாநாடு ராயப்பேட்டை மைதானத்தில் நடத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



12-Aug-2012 பிற்பகல் 12 மணிக்குக் கூடிய நீதிமன்றம் சிறப்பு வழக்காக இதனை எடுத்து விசாரித்தது. நீதிபதி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் அடங்கிய டிவிஷன பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. இதில், மாநாட்டுக்கு நிபந்தனையுடன் கூட் அனுமதி அளிக்குமாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.

----------------------------------

கருத்துகள் இல்லை: