சனி, 18 அக்டோபர், 2014

ஜெயலலிதா இன்று சிறையில் இருந்து விடுதலையாகிறார் !

சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பரப்பனஅக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவு பிறப்பித்தது.


http://epaper.dailythanthi.com/

ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா எழுந்ததாகவும், சிறிது நேரம் நடைபயிற்சி செய்து விட்டு, பின்னர் சிறையில் உள்ள துளசி செடியை வணங்கியதோடு மைசூர் சாமூண்டீஸ்வரி, மூகாம்பிகை அம்மனை வழிப்பட்டதாகவும், செய்திதாள்களை படித்ததாகவும், ஜாமீன் மனு பற்றி சில வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இந்த நிலையில், மதியம் ஜாமீன் மனு மீதான விசாரணை தொடர்பான செய்தியை சிறையில் உள்ள தொலைகாட்சியில் ஜெயலலிதா பார்த்ததாகவும், ஜாமீன் கிடைத்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மற்ற பெண் கைதிகளுக்கு இனிப்பு வழங்கியதாகவும் சிறையில் இருந்து வெளியான தகவல்கள் கூறுகின்றன. அதன்பிறகு, மதிய உணவாக ஜெயலலிதா தயிர்சாதம் சாப்பிட்டதாகவும், பழரசம் குடித்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.மேலும் ஜாமீன் பெற வசதி இல்லாத 3 ஏழை பெண் கைதிகளுக்கு நிதி உதவி அளிப்பதாக அவர் உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.

பெங்களூர்: சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர உள்ள ஜெயலலிதா இன்று மிகுந்த உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். பெங்களூர் மத்திய சிறையில் இன்று காலை 6.30 மணிக்குதான் ஜெயலலிதா வழக்கமாக 5.30 மணிக்கெல்லாம் எழுந்துகொள்ளும் ஜெயலலிதா நிம்மதியாக தூங்கியதாலோ என்னவோ, இன்று ஒரு மணி நேரம் காலதாமதமாக எழுந்துள்ளார்.

சிறிது வாக்கிங் சென்ற பிறகு தமிழ், ஆங்கில பத்திரிகைகளை வாசித்துள்ளார் ஜெயலலிதா. ஒரு பக்கம் விடாமல் அனைத்து பத்திரிகைகளையும் கவனமாக படித்துள்ளார். இதன்பிறகு குளித்துவிட்டு, சிறை வளாகத்திலுள்ள துளசி மாடத்திற்கு பூஜைகள் நடத்தியுள்ளார். பூஜைக்கு பிறகு, இட்லி, பொங்கல் ஆகியவற்றை சாப்பிட்டுவிட்டு மேற்கொண்டு பழச்சாறு பருகியுள்ளார்.
இவற்றை ராஜ்யசபா அதிமுக எம்.பி செல்வகுமார் வாங்கி கொடுத்துள்ளார். மொத்தத்தில், வழக்கத்தைவிட இன்று ஜெயலலிதா மிகுந்த உற்சாகத்துடன் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பின் நகல் நேற்று மாலை வரை பெங்களூர் தனிக்கோர்ட்டுக்கு கிடைக்காததால், அவரால் நேற்று சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

பணி முடிந்து வழக்கமாக மாலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்கா 5.30 மணி வரை கோர்ட்டு அறையில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உத்தரவாத பத்திரம் வழங்குபவர்களும் தயாராக இருந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து தீர்ப்பின் நகல் வந்து சேரவில்லை. இதனால் 5.30 மணிக்கு நீதிபதி மைக்கேல் டி.குன்கா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

எனவே, ஜாமீன் நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, இன்று (சனிக்கிழமை) ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இன்று 22 நாட்களுக்கு பிறகு விடுதலையாகி அங்கிருந்து சென்னை திரும்புகிறார். அதற்கான துரித பணிகளி அவரது வக்கீல் குழு ஈடுபட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: