செவ்வாய், 28 அக்டோபர், 2014

தீர்வு விடயத்தில் தமிழரின் மனதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணியிருக்கின்றதா?

தீர்வு விடயத்தில் தமிழரின் மனதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணியிருக்கின்றதா?




பிரித்தானியாவிலிருந்து ஸ்கொட் லாந்து பிரிந்து செல்வதா அல்லது இல் லையா என்று சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதிக அதிகாரங் களை வழங்குவதாக பிரித்தானியா உறுதி வழங்கியதையடுத்து அதிலி ருந்து பிரிந்து செல்வதை ஸ்கொட் லாந்து மக்கள் விரும்பவில்ç.

எனவே,
இவ்வாறானதொரு பொது வாக் கெடுப்பை இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசுக்குத் திராணியிருக்கின்றதா என்று நேற்று சபையில் சவால் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன்.

நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண் டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.


அவர் தமதுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:


“”ஜனாதிபதித் தேர்தலை நோக்க மாகக்கொண்டதாகவே இந்த வரவு-செலவுத்திட்டம் இருக்கின்றது. வடக்கு, கிழக்குக்கென விசேட முன்மொழிவு கள் இல்லை. வடக்கிலுள்ள தொழிற்சாலைகள் மீள்இயக்கம், தொழில் உருவாக்கம் ஆகியன பற்றியும் குறிப் பிடப்படவில்லை.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்க ளும் ஈழக் கோரிக்கையைக் கைவிட் டால் நிறைவேற்று ஜனாதிபதி முறை மையை நீக்குவதற்குத் தான் தயார் என்று கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

ஈழக்கொள்கைக்கும், நிறைவேற்று முறைமைக்கும் இடையில் என்ன தொடர்பு இருக்கின்றது? புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு ஆயுதக் கிளர்ச்சியை விரும்பவில்லை. இலங் கையில் வாழும் தமிழர்களுக்கு அவர் கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் கெளரவமானதொரு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டும் என்றே அவர் கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உயர் நீதிமன் றில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்துள்ளது.


இந்த நாட்டில் சமஷ்டி போத னையை சிங்களத் தலைவர்கள்தான் முன்னெடுத்தனர். சலுகைகளை வழங்கி தமிழர்களின் உரிமைக் குரலை ஊமையாக்கி விடலாம் என்று அரசு நினைக்கக்கூடாது. தமிழர்கள் கெளரவ மானதொரு அரசியல் தீர்வை எதிர் பார்க்கின்றனர். அதை வழங்க முன்வர வேண்டும். அப்போதுதான் சமாதா னம் என்பது சாத்தியப்படும்.
அதேவேளை, பெரிய பிரித்தானி யாவிலிருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்லவேண்டுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரி வினையை மக்கள் அங்கீகரிக்க வில்லை. எனினும், ஸ்கொட்லாந்து மக்களுக்கு வெற்றி கிடைத்தது. அதாவது, அவர்களுக்கு கூடுதல் அதிகா ரம் வழங்கப்பட்டது. இலங்கைத் தமி ழர்கள் மத்தியிலும் இவ்வாறானதொரு வாக்கெடுப்பை நடத்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?

அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய கெளரவமானதொரு தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அவர் கள் பிரிவினைவாதத்தை விரும்ப வில்லை. இதுபற்றி அவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த அரசுக்குத் திராணி இருக்கிறதா?” – என்றார்.

கருத்துகள் இல்லை: