வியாழன், 27 நவம்பர், 2014

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் சிங்கள படை

மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கில் படையினரின் ரோந்து நடவடிக்கை கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவிலும் பகலிலும் பெரும் எண்ணிக்கையான படையினர் வீதிகளில் சைக் கிள்களிலும் கால்நடையாகவும் ரோந் துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


வடக்கின் நகரப் பகுதிகளில் படை யினர் கால்நடையாகவும், சைக்கிள்க ளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
வடமராட்சிப் பகுதியில் படையின ரின் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வீதிகளில் பயணிப்போரை வழிமறித்துச் சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரத்தின் இறுதி நிகழ்வு நாள் இன்று வியாழக்கிழமை மாலை ஈகை சுடரேற்றலுடன் இடம்பெறும்.

அதேவேளை,
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வே.பிர பாகரனின் 60ஆவது பிறந்தநாள் நேற்றாகும்.

இதனை முன்னிட்டு முதல் மாவீரர் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆகி யோர் பிறந்த பிரதேசமான வடமராட் சிப் பகுதியிலுள்ள வீதிகளில் இரவு நேரங்களில் சைக்கிள்களில் ரோந்துப் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும் கடந்த இரு தினங்களாக அளவுக்கு அதிகமான ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக வல்வெட்டித் துறை, ஊரிக்காடு, உடுப்பிட்டி, புறாப் பொறுக்கி ஆகிய பகுதிக ளில் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் படையினர் இரவு வேளை மற்றும் விடியற்காலைப் பொழு தில் வீதியால் பயணிப்போரை வழிமறித்து ஆள் அடையாளத்தை உறுதிப்படுத் தும் நடவ டிக்கைகளிலும் ஈடுபட்டு வரு கின்றனர்.

குறிப்பாக அல்வாய், மாலுசந்தி, நெல்லியடி, வல்லை போன்ற பகுதி களில் இத்தகைய சோதனை நடவடிக் கைகள் இடம்பெற்றதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

படையினரின் இந்த நடவடிக் கைகளால் இரவு நேரங்களில் வீதிகளில் பயணம் செய்வது அச்சமாகவுள்ளதாக வும், இதனால் நேரத்துடன் வீடுக ளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட் டது.

கருத்துகள் இல்லை: