வெள்ளி, 21 செப்டம்பர், 2012

வைகோ கைது ! ( கறுப்புக்கொடி காட்டாமலேயே )




இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்ட மத்திய பிரதேசம் சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் புத்தமத பல்கலைக்கழக விழாவில் கலந்து கொள்ள அதிபர் ராஜபக்ச சென்றிருக்கிறாN.


இந்நிலையில் இன்று காலை சிந்த்வாராவிலிருந்து சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார்.
ஆனால் வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.


அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்கள், "மன்னிக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! மத்திய அரசை மன்னிக்கமாட்டோம்"!
மத்திய பிரதேச பாஜக அரசையும் மன்னிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர்.


கைது நடவடிக்கையின்போது பொலிஸாருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.
அப்போது பேசிய வைகோ, தமிழர்கள் விடயத்தில் பாஜகவும் காங்கிரசும் மக்களின் மன ஓட்டைத்தைப் புரிந்து கொள்ளாமல் செயற்பட்டு வருகின்றன என்றார்.

கருத்துகள் இல்லை: